பக்கம் எண் :

80சத்திய சோதனை

Untitled Document
கொண்டேன். அப்பொழுது அவர்,  எங்கள்  இருவருக்கும்  விவாக
நிச்சயம் செய்ய       எண்ணியிருக்க மாட்டார்.  என்  பிழையைத்
திருத்திக்கொள்ள இன்னும்        காலம் கடந்து போய்விடவில்லை.
உண்மையைச் சொன்னால் இனிமேலாவது துயரத்திற்கு உள்ளாகாமல்
நான்     காப்பாற்றப் பட்டு விடுவேன். என் மனத்தில்   இத்தகைய
எண்ணங்களுடன் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.   அக்கடிதம்
ஏறக்குறைய பின்வருமாறு இருந்தது:

     நாம் பிரைட்டனில்   சந்தித்ததிலிருந்து    நீங்கள் என்னிடம்
அன்புடன்            இருந்திருக்கிறீர்கள்.  தாய்,  தனது மகனை
கவனிப்பதுபோல என்னைக் கவனித்தும் வந்திருக்கிறீர்கள்.  எனக்கு
மணம் ஆகிவிட வேண்டும் என்றும் நீங்கள் எண்ணுகிறீர்கள். அந்த
நோக்கத்துடன்    இளம் பெண்களை    எனக்கு அறிமுகம் செய்து
வைத்தீர்கள். விஷயம் முற்றுவதற்கு முன்னால், உங்கள்  அன்புக்குத்
தகுதியற்றவனாக நான் இருந்திருக்கிறேன் என்பதை நான் உங்களிடம்
ஒப்புக் கொண்டுவிட வேண்டும்.    நான்    உங்கள் வீட்டுக்கு வர
ஆரம்பித்தபோதே,     எனக்கு மணம் ஆகிவிட்டது என்பதை நான்
உங்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும். இங்கிலாந்தில்    இருக்கும்
இந்திய    மாணவர்கள்,   தங்களுக்கு   மணம் ஆகிவிட்டது என்ற
உண்மையை   மறைந்து   விடுகிறார்கள் என்பதை நான் அறிவேன்.
நானும் அப்படியே செய்தேன். அப்படி நான் செய்திருக்கவே கூடாது
என்பதை இப்பொழுது   உணருகிறேன்.  இன்னும் ஒன்றையும் நான்
கூறவேண்டும்.   சிறு    பையனாக இருக்கும்போதே எனக்கு மணம்
ஆகிவிட்டது;    ஒரு பையனுக்கு நான் தந்தை.  இவ்வளவு காலமும்
இதையெல்லாம் உங்களுக்குத் தெரியாமல் வைத்திருந்து விட்டதற்காக
நான்    மனம் நோகிறேன்.  ஆனால்,  உண்மையைச் சொல்லிவிடும்
தைரியத்தை எனக்குக்     கடவுள் இப்பொழுதாவது அளித்ததற்காக
மகிழ்ச்சியடைகிறேன். என்னை நீங்கள் மன்னிப்பீர்களா?    நீங்கள்
அன்போடு எனக்கு   அறிமுகம் செய்து வைத்த இளம் பெண்ணிடம்
எந்தவிதமான தகாத வழியிலும் நான் நடந்து கொண்டதில்லை என்று
உங்களுக்கு உறுதி    கூறுகிறேன். நான் எவ்வளவு தூரம் போகலாம்
என்பதை    அறிவேன்.   நீங்களோ,  எனக்கு மணம் ஆகிவிட்டது
என்பதை அறியாமல் எங்களுக்குள் விவாகம் நிச்சயம் ஆகவேண்டும்
என்று   இயற்கையாகவே       விரும்பினீர்கள்.   இப்பொழுதுள்ள
கட்டத்திற்குமேல் விஷயங்கள்    போய்விடாமல் இருப்பதற்காக நான்
உங்களிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும்.

     ‘இக்கடிதம்   உங்களுக்குக் கிடைத்த பிறகு,  நீங்கள் காட்டிய
அன்புக்கு அருகதையற்றவனாக நான்     இருந்திருக்கிறேன் என்று
நீங்கள் உணர்ந்தால், அது தவறு    என்று நான் எண்ண மாட்டேன்
என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். உங்களுடைய அன்பினாலும்,