முருகேச முதலியார்
என்பவரின் முயற்சியால் 1958ஆம் ஆண்டில் இந்தத் ‘தங்க ரத
வழிபாடு’ ஏற்பட்டது.6. பொதுவாக இந்துக் கோவில்கள் யாவும் ஒரு குறிப்பிட்ட
நேரம் மட்டுமே வழிபாட்டிற்குத் திறந்து வைக்கப்படுகின்றன.
ஆனால், பழனிமலைக் கோவில், நண்பகலில் எவ்வித இடை
வெளியும் இன்றி, அதிகாலைமுதல் இரவுவரை தொடர்ந்து
எல்லா நேரமும் வழிபாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
7. இந்தியாவில் பல மலைக்கோவில்கள் இருப்பினும்
பழனி மலைக்கோவில் ஒன்றில் மட்டுமே ‘விஞ்ச்’ எனப்படும்
இழுவை ரயில் மின்சாதனம் செயல்படுகிறது. இது 1966 முதல்
செயல்பட்டு வருகிறது. 1981இல் மற்றொரு விஞ்சுக்கான
இருப்புப்பாதை (முதல் பாதை அருகில்) அமைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இங்கு இரண்டு இழுவை ரயில்கள் உள்ளன.
பழனிமலையின் அடிவாரத்தைச் சுற்றிச் செல்லும் கிரி வீதியின்
மேற்குப்பகுதியில் இழுவை ரயில் நிலையம் உள்ளது.
8. தமிழ்நாட்டிலேயே பழனி முருகன் கோவிலில்தான்
மக்கள் மிகுதியான காணிக்கை (உண்டியல்) நிதியைச் செலுத்து
கின்றனர். இந்நிதி கல்விப்பணிக்கும் இதர நற்பணிகளுக்கும்
பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பழனிமலைக் கோவில்
திருப்பதிக்கு அடுத்தபடியாக உண்டியல் வருவாயைப்
பெறுகின்றது.