| 1. ‘நாடாது நட்டலில் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு.’ - குறள் 791 ‘. . . . . . . . பெரியோர் நாடி நட்பி னல்லது நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே.’ - நற்றிணை 32 2. ‘பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்.’ - குறள் 580 ‘...முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்.’ - நற்றிணை 355 3. ‘பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நாட்டார் செயின்.’ - குறள் 805 ‘பேதைமையால் பெருந்தகை கெழுமி நோதகச் செய்ததொன்று உடையேன் கொல்லோ.’ - குறுந்தொகை 230 4. ‘மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு.’ - குறள் 60 ‘கடவுள் கற்பொடு குடிக்குவிளக் காகிய புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின் ...நன்ன ராட்டி.’ - அகம் 18 5. ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.’ - குறள் 110 ‘நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி யில்லென அறம்பா டிற்றே ஆயிழை கணவ.’ - புறம் 34 6. ‘வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.’ - குறள் 85 ‘விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை நின்னோடு உண்டலும் புரைவது என்றாங்கு.’ - குறிஞ்சிப் பாட்டு 206-207 மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளிலிருந்து திருக்குறளுக்கும் சங்க இலக்கியங்களுக்குமிடையே பொதுவாகக் |