பக்கம் எண் :

112தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

     1. ‘நாடாது நட்டலில் கேடில்லை நட்டபின்
       வீடில்லை நட்பாள் பவர்க்கு.’ - குறள் 791

     ‘. . . . . . . . பெரியோர்
     நாடி நட்பி னல்லது
     நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே.’ - நற்றிணை 32

     2. ‘பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
        நாகரிகம் வேண்டு பவர்.’ - குறள் 580

     ‘...முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
     நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்.’ - நற்றிணை 355

     3. ‘பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
        நோதக்க நாட்டார் செயின்.’ - குறள் 805

     ‘பேதைமையால் பெருந்தகை கெழுமி
     நோதகச் செய்ததொன்று உடையேன் கொல்லோ.’
                                   - குறுந்தொகை 230

     4. ‘மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
        நன்கலம் நன்மக்கட் பேறு.’ - குறள் 60

     ‘கடவுள் கற்பொடு குடிக்குவிளக் காகிய
     புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்
     ...நன்ன ராட்டி.’ - அகம் 18

     5. ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
        செய்ந்நன்றி கொன்ற மகற்கு.’ - குறள் 110

     ‘நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
     செய்தி கொன்றோர்க்கு உய்தி யில்லென
     அறம்பா டிற்றே ஆயிழை கணவ.’ - புறம் 34

     6. ‘வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
        மிச்சில் மிசைவான் புலம்.’ - குறள் 85

     ‘விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
     நின்னோடு உண்டலும் புரைவது என்றாங்கு.’
                              - குறிஞ்சிப் பாட்டு 206-207

     மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளிலிருந்து திருக்குறளுக்கும்
சங்க இலக்கியங்களுக்குமிடையே பொதுவாகக்