பக்கம் எண் :

இசைக் கலை

113


 

    ‘‘தெருட்ட லென்றது செப்புங் காலை

    யுருட்டி வருவ தொன்றே மற்ற

    வொன்றன் பாட்டு மடையொன்ற நோக்கின்

    வல்லோ ராய்ந்த நூலே யாயினும்

    வல்லோர் பயிற்றுங் கட்டுரை யாயினும்

    பாட்டொழிந் துலகினி லொழிந்த செய்கையும்

    வேட்டது கொண்டு விதியுற நாடி

 

என வரும். இவை, இசைத் தமிழ்ப் பதினாறு படலத்துள் கரணவோத்துட்
காண்க.’’

 

வாய்ப்பியம்

 

     இந்நூலை இயற்றியவர் வாய்ப்பினார் என்பவர். அவர் பெயரே
இந்நூலுக்குப் பெயராயிற்று. இந்த நூலையும் இந்நூல் சூத்திரத்தையும்
யாப்பருங்கல விருத்தியுரைகாரர் குறிப்பிடுகிறார். இந்நூலிலிருந்து
உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிற சூத்திரங்கள சிலவற்றைக் காட்டுவோம்:
 

    ‘‘பாலை குறிஞ்சி மருதஞ்செவ் வழியென

     நால்வகைப் பண்ணா நவின்றனர் புலவர்’’

 

என்றார் வாய்ப்பியனார். விளரி யாழோடைந்துமென்ப. இனிப் பண்
சார்பாகத் தோன்றியன திறமாம். என்னை?

 

    ‘‘பண்சார் வாகப் பரந்தன வெல்லாந்

    திண்டிற மென்ப திறனறிந் தோரே’’

 

என்றாராகலின். அத்திறம் இருபத்தொரு வகைய:

 

     ‘அராக நேர்திற முறழம்புக் குறுங்கலி

     யாசா னைந்தும் பாலையாழ்த் திறனே.’

 

     நைவளங் காந்தாரம் பஞ்சுரம் படுமலை

     மருள் வியற் பாற்றுஞ்

     செந்திற மெட்டுங் குறிஞ்சியாழ்த் திறனே.’