பக்கம் எண் :

124
124

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


   

உலாச்செய்யுளின் இராகம் சௌராஷ்டிரம். பிள்ளைத் தமிழின் இராகம்
கேதாரகவுளம். பரணியின் இராகம் கண்டாரவம்.
   
    3 குணம் : குணம் பற்றிய இராகங்கள். இரக்கம் உள்ளவை: ஆகரி,
கண்டாரவம், நீலாம்பரி, பியாகடம், புன்னாகவராளி. துக்கம் உள்ளவை:
மேற்கூறிய இரக்க இராகங்களும் வராளி இராகமும். மகிழ்ச்சியுள்ளவை:

காம்போதி, சாவேரி, தன்னியாசி, யுத்த இராகம்: நாட்டை.

   

     4. காலம் : காலம் பற்றிய இராகங்கள். வசந்த கால இராகம்:
காம்போதி, அசாவேரி, தன்னியாசி.
   

     மாலைவேளை இராகம்: கலியாணி, காபி, கன்னடம், காம்போதி.
யாமவேளை இராகம்; ஆகரி.

   

     விடியற்காலை இராகம்: இந்தோளம், இராமகவி, தேசாட்சரி, நாட்டை,
பூபாளம்.

   

     உச்சிவேளை இராகம்: சாரங்கம், தேசாட்சரி.

   

     எக்காலத்துக்கும் பொதுவான இராகங்கள்: ஆகரி, இந்தோளம்,
இராமகவி, சாரங்கம், பூபாளம் இவை நீக்கி மற்ற இராகங்கள் எல்லாம்
கொள்க.

   

     இராகங்கள்: பைரவி, தேவகிரியை, மேகவிரஞ்சி, குறிஞ்சி, பூபாளம்,
வேளாவளி, மலகரி, பௌளி, சீராகம், இந்தோளம், பல்லதி, சாவேரி,
படமஞ்சரி, தேசி, இலலிதை, தோடி, வசந்தம், இராமக்கிரியை, வராளி,
கைசிகம், மாளவி, நாராயணி குண்டக்கிரியை, கூர்ச்சரி, பங்காளம்,
தன்னியாசி, காம்போதி, கௌளி, நாட்டை, தேசாட்சரி, காந்தாரி, சாரங்கம்
முதலியன.

   

     இவற்றுள், பைரவி என்பது ஆண் இராகம். தேவக்கிரியை,
மேகவிரஞ்சி, குறிஞ்சி இவை பெண் இராகங்கள்.