126 |
தமிழர் வளர்த்த
அழகுக் கலைகள் |
இசைக்கருவிகள்
இசைப்பாட்டிற்கும் பரதநாட்டியம், கூத்து முதலியவற்றிற்கும்
இசைக்கருவிகள்
(பக்க
வாத்தியங்கள்) இன்றியமையாதவை. அவற்றைப்
பற்றிக் கூறுவோம்.
இசைக்கு உரிய ஓசைகள் ஐந்து பொருள்களில் உண்டாகின்றன.
அப்பொருள்கள்
தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக்
கருவி, மிடறு (கழுத்து) என்பன.
இவற்றில் உண்டாகும் ஓசைகளை
ஒழுங்குபடுத்தி இசையை அமைத்தார்கள். அவற்றை
விளக்குவோம். முதலில்
தோற்கருவிகளைக் கூறுவோம். தோற் கருவிகள் மரத்தினால்
செய்யப்பட்டுத்
தோலால் கட்டப்பட்டவை.
அவையாவன: பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம்,
சல்லிகை, கரடிகை,
திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம்,
தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவலையம், மொந்தை, முரசு,
கண்விடு தூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம்,
தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப் பறை, தடி, பெரும்பறை.
இவற்றில் மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை, படகம், குடமுழா
என்பன
இசைப்பாட்டிற்குப் பக்க வாத்தியமாக உள்ளவை. இவை அகமுழவு
எனப்படும்.
தண்ணுமை, தக்கை, தகுணிச்சம் என்பன மத்திமமான கருவிகள்.
இவை அகப்புற முழவு எனப்படும்.
கணப்பறை முதலியன அதமக் கருவிகள். புறமுழவு எனப்படும்.
மத்தளம், சல்லிகை,
கரடிகை என்பன ஓசையினால் பெற்ற பெயர்கள். மத்து
என்னும் ஓசையினால் மத்தளம்
என்னும் பெயர் உண்டாயிற்று. சல்லென்னும்
ஓசையை யுடையதனால் சல்லிகை என்னும்
பெயர் பெற்றது;
|