பக்கம் எண் :

130
130

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


  

   ‘‘திண்வார் விசித்த முழவொடு ஆகுளி

    நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்

    மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு

    கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின்

    இளிப்பயிர் இமிரும் குரும்பரந் தூம்பொடு

    விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ

    நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை

    கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி

    நொடிதரு பாணிய பதலையும் பிறவும்

    கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப

    நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையர்’’

                               (மலைபடுகடாம்: 3-13)

 

     இவற்றில் பதலை என்னும் இசைக்கருவியும் கூறப்பட்டுள்ளது.

 

     ஓரி என்னும் வள்ளலுடைய சபையிலே ஒரு பாணன் தன்னுடைய
குழுவினருடன் சென்று இசைப்பாட்டுப் பாடத் தொடங்கினான். அப்போது
அவன், விறலியைத் தன்னுடன் சேர்ந்து பாடும்படியும், மற்றவர்கள் இசைக்
கருவிகளை வாசிக்கும்படியும் கூறினான் என்று வன்பரணர் என்னும் புலவர்
கூறுகின்றார்:

 

    ‘‘பாடுவல் விறலிஓர் வண்ணம் நீரும்

    மண்முழா அமைமின், பண்யாழ் நிறுமின்,

    கண்விடு தூம்பின் களிற்றுயிர் தொடுமின்

    எல்லரி தொடுமின், ஆகுளி தொடுமின்

    பதலை ஒருகண் பையென இயக்குமின்’’

                               (புறம்: 152: 18-22)

 

இதிலும் பதலை கூறப்படுவது காண்க.