பக்கம் எண் :

32

32

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

என்று, செங்கட் சோழனைப் பற்றித் திருமங்கையாழ்வார் கூறுவதிலிருந்து
அறியலாம். மேலும்,

 

    ‘பெருக்காறு சடைக்கணிந்த பெம்மான் சேரும்

    பெருங்கோயில் எழுபதினோ டெட்டும்.’’1

 

என்று திருநாவுக்கரசர் கூறுவதும் சோழன் செங்கணான் அமைத்த
பெருங்கோயில்களையேயாகும். சோழன் செங்கணான் அமைத்த
பெருங்கோயில்கள் எழுபத்தெட்டும் செங்கற் கட்டடங்களே. ஏனென்றால், கற்றளிகள் - அதாவது, கருங்கற் கட்டடங்கள் - கட்டும் முறை
அக்காலத்தில் ஏற்படவில்லை. செங்கற் கட்டடங்கள் ஆகையினாலே, அவை
இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல் நிலைபெற்றிருக்க
இடமில்லை.

 

பாறைக் கோயில்கள்

 

       கி. பி. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தொண்டை நாட்டையும்
சோழ நாட்டையும் மகேந்திர வர்மன் என்னும் பல்லவ அரசன்
அரசாண்டான். இவன் ஏறக்குறைய கி. பி. 600 முதல் 630 வரையில் ஆட்சி
செய்தான். இவன் காலத்தில் திருவாவுக்கரசு சுவாமிகள் இருந்தார்.
இவ்வரசன் கோயிற் கட்டட அமைப்பில் புதிய முறையை ஏற்படுத்தினான்.
பெரிய கற்பாறைகளைக் குடைந்து
அழகான ‘குகைக் கோயில்களை’ (பாறைக்
கோயில்களை) அமைத்தான். பாறையைச் செதுக்கித் தூண்களையும்
முன்மண்டபத்தையும் அதற்குள் திருவுண்ணாழிகையையும் (கருப்பக்
கிருகத்தையும்) அமைக்கும் புத்தம் புதிய முறையை இவன் உண்டாக்கினான்.

 

     மகேந்திரவர்மன் கற்பாறைகளைக் குடைந்து அமைத்த
குகைக்கோயில்களில ஒன்று மண்டகப்பட்டு என்னும் ஊரில் இருக்கிறது.
இவ்வூர், தென் ஆர்க்காடுமாவட்டத்தில்,


1. திருஅடைவு திருத்தாண்டகம், 5.