|
சாஸ்திரங்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்நூலில் கட்டடக்
கலையின் பொதுவான செய்திகளை
மேலோட்டமாகக் கூறுகிறபடியால்,
அவற்றைப் பற்றிய விரிவான செய்திகளை இங்குக் கூறவில்லை.
முக்கியமான
சிலவற்றைச் சுருக்கமாகக் கூறுவோம்.
கோயிற் கட்டடத்தில் ஆறு உறுப்புகள் உண்டு. அவையாவன: அடி;
2. உடல்; 3. தோள்; 4. கழுத்து; 5. தலை; 6. முடி.
இந்தப் பெயர்களுக்குச் சிற்ப நூலில் வேறு பெயர்கள் கூறப்படுகின்றன.
அப்பெயர்களாவன: 1. அதிஷ்டானம்; 2. பாதம்; மஞ்சம்; 4. கண்டம்; 5.
பண்டிகை;
6. ஸ்தூபி. இவற்றை விளக்குவோம்.
1. அடி அல்லது தரையமைப்பு. இதற்கு அதிஷ்டானம், மசூரகம்,
ஆதாரம், தலம்,
பூமி
முதலிய பெயர்கள்
உண்டு.
2. உடல் அல்லது திருவுண்ணாழிகை. இதற்குக் கால், பாதம், ஸ்தம்பம்
கம்பம
முதலிய பெயர்கள்
சிற்ப நூலில் கூறப்படுகின்றன. இப்பெயர்கள்
திருவுண்ணாழிகையின
(கருவறையின்) சுவர்களைக்
குறிக்கின்றன.1
3. தோள் அல்லது தளவரிசை, இதற்குப் பிரஸ்தரம், மஞ்சள், கபோதம
முதலிய
பெயர்கள் உள்ளன.
4. கழுத்து. இதற்குக் கண்டம், களம், கர்ணம் முதலிய பெயர்கள்
உண்டு.
5. தலை அல்லது கூரை. இதற்குப் பண்டிகை, சிகரம், மஸ்தசம், சிரம்
முதலிய
பெயர்கள் உள்ளன.
1. திருவுண்ணாழிகைக்கு அகநாழிகை என்றும் பெயர் உண்டு.
|