பக்கம் எண் :

56

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


சோழர் காலம் என்பது பிற்காலச் சோழர் காலம். இது கி.பி.900 முதல்
1300 வரையில் உள்ள காலம். இந்தக் காலத்தில் சோழ அரசர்கள் புதிதாகக்
கற்றளிகளை அமைத்ததோடு, பழைய செங்கற் கோயில்களை இடித்து
அக்கோயில்களைக் கற்றளியாகப் புதுப்பித்தார்கள். அன்றியும்,

ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும், கோயில்கள் அமைக்கப்பட்ட
காலமும் இதுவே. மேலும், சிவன் கோயில்களிலே அம்மன் சந்நிதிகள்
தனியாகக் கட்டப்பட்ட காலமும் இதுவே. சோழர் காலத்துக்கு முன்பு, சிவன்
கோயில்களில் அம்மனுக்கென்று தனியாகக் கோயில் இல்லை. இச்செய்தியைச்
சோழர்காலத்துச் சாசனங்களிலிருந்து அறிகிறோம்.

பல்லவர் காலத்துத் தூண்கள்

பாண்டியர் கட்டடக் காலம் என்பது கி.பி.1300 முதல் 1500 வரையில்
உள்ள காலம்.

விஜயநகர அரசர் கட்டடக்காலம் என்பது கி.பி.1500 முதல் 1700
வரையில் உள்ள காலம்.