கட்டடக் கலையைப் பற்றிப் பல்லவ, சோழ, பாண்டிய, விஜயநகர காலம்
என்று சொல்லும்போது, இந்தக்
காலங்களில் கோயிற் கட்டடங்களில்
வெவ்வேறு மாறுதல்கள் ஏற்பட்டன என்று கருதக்கூடாது. பெரிய
மாறுதல்கள் ஒன்றும் ஏற்படவில்லை. ஆனால், தூண்கள், கர்ண கூடு,
கோஷ்ட பஞ்சரம் முதலிய உறுப்புகளில்
அந்தந்தக் காலத்தில்
சில மாறுதல்கள் ஏற்பட்டன. இந்த மாறுதல்களைக் கொண்டுதான்
மேற்சொன்னபடி
காலத்தைப் பிரித்திருக்கிறார்கள்.

பிற்காலத்துத் தூண்கள்
குகைக்கோயில்களும் பாறைக்கோயில்களும் கி.பி.600இல் இருந்து 850
வரையில் தமிழ் நாட்டிலே முதன் முதல் அமைக்கப் பட்டன.
குகைக்கோயிலைத் தமிழ்
|