பக்கம் எண் :

சிற்பக் கலை

69


 

இரண்டு வகைச் சிற்பம்

 

     சிற்ப உருவங்களை முழு உருவங்கள் என்றும் புடைப்புச்
சிற்பங்கள்
என்றும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். முழு உருவச் சிற்பம்
என்பது, பொருள்களின் முன்புறம், பின்புறம் முதலிய முழு உருவமும்
தெரிய அமைக்கப்படுவது. புடைப்புச் சிற்பம்1 என்பது. பொருள்களின்
ஒருபுறம் மட்டும் தெரியும்படி சுவர்களிலும் பலகைகளிலும்

அமைக்கப்படுவது. இவ்விரண்டுவிதச் சிற்ப உருவங்களும் கோயில்களிலே
அமைக்கப்படுகின்றன.

 

தத்ரூப உருவங்கள்

 

     தமிழ் நாட்டுச் சிற்பக் கலை, பாரத நாட்டுச் சிற்பக் கலையைப்
போலவே, சமயத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி பெற்றிருக்கிறது
ஆகவே, தெய்வ உருவங்கள் நமது நாட்டுச் சிற்பக் கலையில் பெரிதும்
முதன்மை பெற்றுள்ளன. கிரேக்க தேசம், உரோமாபுரி முதலிய
மேல்நாடுகளிலே மனித தத்ரூப சிற்ப உருவங்கள்2 சிறப்பாக வளர்ச்சி
பெற்றதுபோல நமது நாட்டில் மனித தத்ரூப சிற்பக் கலை (ஓரளவு பயிலப்
பட்டதே யல்லாமல்) முழு வளர்ச்சி யடையவில்லை. இதன் காரணம்,
நம்மவர் தத்ரூப  உருவங்களைச் செய்து வைக்கும் வழக்கத்தை அதிகமாகக்
கொள்ளாததுதான். ஆனால், நமது நாட்டில கற்பனை உருவச் சிற்பங்கள்
பெரிதும் வளர்ந்திருக்கின்றன.

 

கல்லும் உலோகமும்

    

        நமது நாட்டுச் சிற்பக் கலை சமயத்தை அடிப்படையாகக் கொண்டு
வளர்ச்சி பெற்றது என்று கூறினோம். சைவ, வைணவச்
சிற்ப உருவங்களை


1.  Bas-relief

2.  Portrait sculpture.