பக்கம் எண் :

76

76

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

இருக்கின்றன. ஆனால், சைவ, வைணவச் சிறு தெய்வங்களுக்கு இரண்டு
கைகள் மட்டுமே இருக்கின்றன.

 

     உதாரணமாக, பௌத்தர்களின் சிறு தெய்வமாகிய அவலோகிதர், புத்த
பதவியடையும் நிலையை அடைந்திருந்தாலும், அப்பதவியை இன்னும்
அடையாத படியால், சிறு தெய்வமாகக் கருதப்படுகிறார். ஆகையினாலே,
அவருக்கு நான்கு கைகளைக் கற்பித்திருக்கிறார்கள். அதுபோலவே தாரை
முதலிய சிறு தெய்வங்களுக்கு நான்கு கைகளைக் கற்பித்திருக்கிறார்கள்.
பௌத்தரின் உயர்ந்த தெய்வமாகிய புத்தருக்கு இரண்டு கைகள் மட்டும்
உள்ளன.

 

     சமணரும் தமது உயர்ந்த தெய்வமாகிய அருகர் அல்லது தீர்த்தங்கரர்
உருவங்களுக்கு இரண்டு கைகளை மட்டும் கற்பித்திருக்கிறார்கள். ஆனால்,
அவர்கள் வணங்கும் இந்திரன், யக்ஷி, ஜு வாலாமாலினி முதலிய சிறு
தெய்வங்களுக்கு நான்கு கைகளைக் கற்பித்துச் சிற்பஉருவங்களை

அமைத்திருக்கிறார்கள்.

 

     பௌத்த, சமணர்களுக்கு மாறாகச் சைவரும், வைணவரும் தமது
பரம்பொருளான உயர்ந்த கடவுளுக்கு நான்கு அல்லது எட்டுக் கைகளைக்
கற்பித்துத் தமது சிறு தெய்வங்களுக்கு இரண்டு கைகளை மட்டும் கற்பித்துச்
சிற்ப உருவங்களை அமைத்திருக்கிறார்கள். இந்த நுட்பம் இந்தச்
சமயங்களின் சிற்ப உருவங்களைக் கூர்ந்து பார்த்தால் நன்கு விளங்கும்.

 

     சைவ, வைணவ சிற்ப உருவங்களைப் பற்றி இன்னொரு நுட்பத்தையும்
வாசகர்கள் உணரவேண்டும். சிவன், திருமால் உருவங்களுக்கு முதன்மை
கொடுக்கும்போது அவ்வுருவங்களுக்கு நான்கு அல்லது எட்டுக் கைகளைக்
கற்பித்து, அவர்களின் சக்தியாகிய அம்மன், தேவி உருவங்களுக்கு இரண்டு
கைகளை மட்டும் கற்பிக்கிறார்கள்; ஆனால்,