அம்மன், தேவிகளுக்கு முதன்மை
கொடுக்கும்போது அவ்வுருவங்களுக்கு
நான்கு அல்லது எட்டுக் கைகளைக் கற்பித்துச் சிற்ப உருவம்
அமைக்கிறார்கள். சிற்பக் கலையை ஆராயும் வாசகர்கள் இந்த
நுட்பத்தையும் உணரவேண்டும்.
நால்வகைப் பிரிவு
உலோகத்தினாலும் கல்லினாலும்
அமைக்கப்பட்ட சிற்ப உருவங்களைத் தெய்வ உருவங்கள் என்றும், இயற்கை உருவங்கள் என்றும், கற்பனை
உருவங்கள் என்றும், பிரதிமை உருவங்கள் என்றும் நான்கு பெரும்
பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
தெய்வ உருவங்கள் என்பது
சிவபெருமான், பார்வதி, கணபதி, முருகன்
முதலிய சைவ சமயத் தெய்வ உருவங்களும், திருமால், இலக்குமி,
கண்ணன், இராமன் முதலிய வைணவ சமயத் தெய்வ உருவங்களும் ஆகும்.
இயற்கை உருவங்கள் என்பது மனிதன்,
மிருகம், பறவை முதலிய
இயற்கை உருவங்கள் ஆகும்.
கற்பனை உருவங்கள் என்பது
இயற்கையில் காணப்படாத,
கற்பனையாகக் கற்பித்து அமைக்கப்பட்ட உருவங்கள், இலைக்கொடிகள்,1
சரபப் பட்சி, இருதலைப் பட்சி, மகரம், கின்னரம், குக்குட சர்ப்பம், நாகர்,
பூதர் முதலியவை
கற்பனை உருவங்களாகும். அன்றியும், கற்பனையாக
அமைக்கப்பட்ட இலைக்கொடி, பூக்கொடி உருவங்களுமாகும்.
பிரதிமை உருவங்கள் என்பது
ஆட்களின் உருவத்தைத் தத்ரூபமாக
அமைப்பது.
இந்த
நான்கு விதமான சிற்பங்களை நமது நாட்டுக் கோயில்களில்
காணலாம்.
உதாரணத்திற்காக இச்சிற்பங்களில்
1. Designs
|