பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 100

  ஊரே தென்றேன்
     இருள் என்றாய்
ஒளியே
உயிரே
உயர்வே, வா!
அழுக்கின் உருவே அருகில் வா-உனை
அணைத்துக் கொள்வேன் அஞ்சாதே
உலகின் அழுக்கைச் சுமந்தாலும்
உள்ளத் தழுக்கில்லா உருவே
அழுக்கைக் கடந்து வந்துவிட்டாய்-நீ
அழுக்கின் உருவம் கொண்டுவிட்டாய்

பொய்யின் உருவே அருகில் வா உனைப்
     புரிந்து கொண்டேன் ஓடாதே
     உலகின் பொய்யைச் சுமந்தாலும்
     உள்ளப் பொய்மையில்லா-உருவே
பொய்யைக் கடந்து வந்து விட்டாய்-நீ
பொய்யின் உருவம் கொண்டுவிட்டாய்.

இருளின் உருவே அருகில் வா-நாம்
இணைவோம் ஒன்றாய் விலாகதே
     உலகின் இருளைச் சுமந்தாலும்
     உள்ளத் திருளில்லா உருவே
இருளைக் கடந்து வந்து விட்டாய் - நீ
இருளின் உருவம் கொண்டு விட்டாய்.
அழுக்கின் உருவே உன்னிதழில்
அமுதம் ஊறுவதெப்படியோ?
பொய்யின் உருவே உன்னகத்தில்
புனிதம் ஒளிர்வதெப்படியோ ?
இருளில் உருவம் உன் விழியில்
அருளொளி வீசுவதெப்படியோ ?

     தி.சோ. வேணுகோபாலனும், டி.கே. துரைஸ்வாமியும் தங்கள் சோதனைகளைத்
தொடர்ந்து செய்து வந்தனர்.

     வேணுகோபாலன் வாழ்க்கைத் தத்துவங்களை சாதாரண நிகழ்ச்சிகளோடு பொருத்திக்
காட்டி எளிய முறையில் கவிதைகள் இயற்றினார். உதாரணத்துக்கு ‘ஞானம்’ என்பதைக்
கூறலாம்.
 
சாளரத்தின் கதவுகள், சட்டம்
காற்(று) உடைக்கும்.
தெருப்புழுதி வந்தொட்டும்
கறையான் மண்வீடு கட்டும்.
அன்று துடைத்தேன்,
சாயம் அடித்தேன்,
புதுக்கொக்கி பொருத்தினேன்.
காலக் கழுதை