பக்கம் எண் :

101  வல்லிக்கண்ணன்

  கட்டெறும்பான
இன்றும்
கையிலே
வாளித்தண்ணீர், சாயக்குவளை
கந்தைத் துணி, கட்டைத் தூரிகை!
அறப்பணி ஓய்வதில்லை,
ஓய்ந்திடில் உலகம் இல்லை!
 
‘ஸட்டயர்’ ஆக-- பரி்காசத் தொனியோடு எழுதும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்.
‘விசாரணை’ என்பது இந்த ரகத்தைச் சேரும்.
 
  தத்துவந்தானே? வெங்காயம்!
போடா! போ!
மூடியதை மூடிப்
பின்மூடி! முடிவா?
உரித்தால் மேலும் உரித்தால்
கண்ணீர் கொட்டும்
முட்டாளுக்கு உருக்கம்!
மூளை மோதினால்
தலைக்குத் தேங்காய்!
உனக்கும் எனக்கும்
முடிந்தால்
இதயத்திற்கு மருந்து!
அனேகருக்கு
வயிற்றை நிரப்ப
வேகும் கூத்துத்தான்!
என்று மேலும் வளர்கிறது அது.

     ‘இலக்கிய அனுபவம்’ என்பதும் நல்ல கிண்டல்தான்.
 
சொல்வ திரண்டு வகை
சிந்தித்துச் சொல்லல்!
சிந்தை இலையாதல்!
கரகம் அல்லது
கண்கட்டு;
இரண்டுக்கும்
பொருள்
சொன்னவன் புலவன்!
கண்டவன் கலைஞன்!
முழிப்பவன்
நீயும் நானும் கேவலம்
வாசகக் கும்பல்!
 
     டி. கே. துரைஸ்வாமி சோதனைக்காகவே சோதனை என்ற தன்மையில் கவிதை
முயற்சிகளில் தீவிரமாக முனைந்தது போல் தோன்றுகிறது. படிப்பவரைக் குழப்பமுற
வைப்பது அவரது கவிதைகள் சிலவற்றின் முக்கிய நோக்கம் என்று எண்ண
வேண்டியிருக்கிறது. க.நா.சு. புதுக்கவிதைக்கு வகுத்த இலக்கணத்தை-’கவிதை சிக்கலும்