| 					  | 										அள்ளி விழுங்குவரை 					நீர்பாய்ச்சி என்ன பயன் 					வேர்முளைக்கக் காணோமே! | 				
														      முதல் வருடத்தில் கவிதை எழுதத் தொடங்கிய கி.கஸ்தூரி ரங்கன் 					‘கற்பனைப்  					பெண்’ என்ற இனிய கவிதை ஒன்றே ஒன்றை மட்டும் எழுதியதுடன் நிறுத்திக்கொண்டார். 					அது ரசிக்கப்பட வேண்டிய படைப்பு. | 				
									| 					  | 										 					மஞ்சம் ஒழிந்திருக்கப் 					பஞ்சணைகள் பூத்திருக்க 					கன்னம் செவ செவக்கக் 					கற்பனையே பெண்ணே 					நீ  					நெஞ்சில் துயிலுவதேன்-என் 					நெஞ்சில் துயிலுவதேன்? 					உதயம் ஒளித்திசையில் 					உருவாவ தறியாமல் 					இதயம் துடித்திசைக்கும் 					இன்பத்தா லாட்டுக்களில் 					கதையாம் கவிதைகளாம் 					கனவுகளாகக் கண்டு கொண்டு 					கண்ணில் உறங்குவதேன்-என் 					கண்ணில் உறங்குவதேன்? 					நெஞ்சோ முட்படுக்கை! என் 					கண்ணோ கனலிருக்கை! 					பஞ்சோ பொறியருகில்? 					மலரோ முள்ளின் மேல்? 					நஞ்சோ அமுதமாகும்? 					நானோ(உ)ன்னருள் பெற்றேன்!   | 				
														     வேறு சிலரும் அபூர்வமாக ஒன்றிரண்டு கவிதைகள் 					எழுதினார்கள். எனது கவிதைகள் 					இரண்டு (விஷமும் மாற்றும்; குருட்டு ஈ) 16-வது இதழில் இடம் பெற்றன. 					      பிச்சமூர்த்தி இயற்கை தரிசனங்களையும் வாழ்க்கை உண்மைகளையும் 					இணைத்து 					அவ்வப்போது கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தார். சுமைதாங்கி, லீலை, 					போலி, 					திறவுகோல், ஸ்விச், மணல் ஆகியவை 1960-61 வருடங்களில் ‘எழுத்து’ 					ஏடுகளில் 					பிரசுரமாயின. 					 					ஜெகாந்தன் எழுதிய கவிதை ஒன்று (நீயார் - எழுத்து 32) குறிப்பிடத் தகுந்தது.   | 				
									| 					  | 										நீ யாரென்றேன்       அழுக்கு என்றாய்  					பேரேதென்றேன்       பொய் என்றாய்  |