பக்கம் எண் :

99  வல்லிக்கண்ணன்

  அள்ளி விழுங்குவரை
நீர்பாய்ச்சி என்ன பயன்
வேர்முளைக்கக் காணோமே!

     முதல் வருடத்தில் கவிதை எழுதத் தொடங்கிய கி.கஸ்தூரி ரங்கன் ‘கற்பனைப்
பெண்’ என்ற இனிய கவிதை ஒன்றே ஒன்றை மட்டும் எழுதியதுடன் நிறுத்திக்கொண்டார்.
அது ரசிக்கப்பட வேண்டிய படைப்பு.
 
மஞ்சம் ஒழிந்திருக்கப்
பஞ்சணைகள் பூத்திருக்க
கன்னம் செவ செவக்கக்
கற்பனையே பெண்ணே
நீ
நெஞ்சில் துயிலுவதேன்-என்
நெஞ்சில் துயிலுவதேன்?
உதயம் ஒளித்திசையில்
உருவாவ தறியாமல்
இதயம் துடித்திசைக்கும்
இன்பத்தா லாட்டுக்களில்
கதையாம் கவிதைகளாம்
கனவுகளாகக் கண்டு கொண்டு
கண்ணில் உறங்குவதேன்-என்
கண்ணில் உறங்குவதேன்?
நெஞ்சோ முட்படுக்கை! என்
கண்ணோ கனலிருக்கை!
பஞ்சோ பொறியருகில்?
மலரோ முள்ளின் மேல்?
நஞ்சோ அமுதமாகும்?
நானோ(உ)ன்னருள் பெற்றேன்!
 
     வேறு சிலரும் அபூர்வமாக ஒன்றிரண்டு கவிதைகள் எழுதினார்கள். எனது கவிதைகள்
இரண்டு (விஷமும் மாற்றும்; குருட்டு ஈ) 16-வது இதழில் இடம் பெற்றன.

     பிச்சமூர்த்தி இயற்கை தரிசனங்களையும் வாழ்க்கை உண்மைகளையும் இணைத்து
அவ்வப்போது கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தார். சுமைதாங்கி, லீலை, போலி,
திறவுகோல், ஸ்விச், மணல் ஆகியவை 1960-61 வருடங்களில் ‘எழுத்து’ ஏடுகளில்
பிரசுரமாயின.

ஜெகாந்தன் எழுதிய கவிதை ஒன்று (நீயார் - எழுத்து 32) குறிப்பிடத் தகுந்தது.
 
  நீ யாரென்றேன்
     அழுக்கு என்றாய்
பேரேதென்றேன்
     பொய் என்றாய்