பக்கம் எண் :

105  வல்லிக்கண்ணன்

  ஓரே கணத்தில்
விரக்தி வடிவாகி நரைக்கக்

காரணம். கன்னி ஒருத்தி அவன் ஆசையோடு நெருங்கி கேட்டபோது, அவள்
 
‘தனி ஊசல் போல
இடவலமாய் தலையசைத்’ததுதான்!

     காதல் தோல்வி கண்ட விரக்தி உள்ளத்தின் வாழ்க்கைச் சூன்ய நோக்கை இக்கவிதை
சித்திரிக்கிறது.
 
  ‘இருளின் நிழல்’ என்பதும்
சாக்காட்டு உலகில்
என்னை விட்டு
கூடு விட்ட பறவையென

     ஓடி மறைந்த ‘பெண்ணை எண்ணிப் பித்துற்ற மனசின் விரக்திப் புலம்பல்தான்.
‘கதவை மூடு’ வேறு தொனியில் அமைந்துள்ளது. ஆயினும், இதிலும் விரக்தியே
மேலோங்கி நிற்கிறது.
 
  கதவை மூடு
வீங்கி விரிந்த மாநிலம்
துவண்டு விழுந்தால் ஆறடி
வாழ விட்ட பூமகள்
சாய்ந்ததும் செரித்திடுவாள்;
அபூர்வமாய் பெற்ற மகனாய்
நீ வளர்த்த நாயும் கடிக்கும்;
நோய் பிடிக்க கடனேற
நீயே
உனக்கு எதிராவாய்;
கதவை மூடு, கதவை மூடு
நகையாய் வெறுத்த உடை
நலிந்தும் கூடையிலே;
பூவையர் குழல் பூச்சரம்
வாடியதும் குப்பையிலே
விளங்க வந்த மனைவிக்கு
மாத முடிவில் மூலையிலே;
வானுக்கு உயிரூட்டி
சிரித்தேகும் எரிகல்
உதிர்ந்ததும் ஒன்றுமில்லை
காற்றேன்? மூச்சேன்?
கதவை மூடு, கதவை மூடு,
 
கவிஞர்கள் நிலவை எவ்வாறெல்லாமோ வர்ணித்து விட்டார்கள்.