பக்கம் எண் :

115  வல்லிக்கண்ணன்

சாதிக்க ஒரு வரிக்குள்ளேயே நிறுத்துகளை அளவமைய அமைத்தல், மோனை, ‘காடென்ஸ்’
என்கிறோமே, குரல் இறக்கம் ஏற்றம், ஓரொரு சமயம் சந்தமும் கூட, ஆகிய சாதனங்களை
சிபார்சு செய்தார்கள். ஆக, மொத்தத்தில், இன்று கவிதை வெளியிட வேண்டியிருக்கிற
புதிய விஷயத்துக்கு இடம் கொடுக்க, சந்தக் கவிதைக்கு ‘ஓவர் ஹாலிங்’ அதாவது பழுது
பார்த்துச் செப்பனிடல் தேவை என்று கருதினார்கள்.

     உருவம் விஷயம் இப்படி இருக்க, உள்ளடக்கம் விஷயத்திலும் பாதிப்பு ஏற்பட்டது
ஃபிராய்டின் கருத்துக்களால் கவிஞர்களது அகநோக்கு இதுவரை கண்டிராத அளவு விரிவும்
ஆழமும் பெற்றது. உணர்வு உலகத்தில் இன்னும் ஆழத் துளாவி துருவிப் பார்த்தார்கள்
மென்மையானதும், சிக்கலானதும் கூட்டுக் கலப்பானதும். திட்டமான எண்ணத்துக்கு
உருவாகாமல் பிரக்ஞை நிலையிலேயே இருக்கும் அக உளைச்சல்களை எல்லாம் சொல்லிப்
பார்த்தார்கள். கணக்கற்ற அணுக்களைப் போல் எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஒரே
சமயத்தில் மனதுக்குள் பொழியும் மனப்பதிவுகளை, மாறுபடும், இனம் தெரியாத ஒரு
கட்டுக்கடங்காத மனப்போக்கை வெளித் தெரிவிப்பது தங்கள் கடமை என்று கருதினார்கள்.
அதே சமயம் புற உலகமும் அவர்களைப் பாதித்தது. புதிய விஞ்ஞானத் தகவல்கள்
பிரபஞ்ச விசாரணையிலே புதுப் பார்வைகளை ஏற்றின. வாழ்க்கை ஒரு ஐக்யத் தன்மை
வாய்ந்தது என்பதோடு தொடர்ந்து ஓடும் ஒரு தாரை, சென்றது. நிகழ்வதுடன் பிணைகிறது.
நிகழ இருப்பதின் வெளிக் கோட்டை உருவாக்க ஒரு கணம் மறுகணம் என்றெல்லாம்
இருந்தாலும் ஒன்றை அடுத்து ஒன்றாக இடையறாமல் தொடர் நிலையாக ஓடிக்
கொண்டிருக்கும் கணப்பொழுதுகளால் ஆவது தான் வாழ்க்கை. ஒவ்வொரு
நிகழ்கணப்பொழுதும் எல்லாக் காலத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது.
அத்தகைய கணப்பொழுதில் நின்று பார்க்கிற கவிதையின் பார்வையின் காலம் வெளி
இரண்டும் பேதமற்றுப் போய்விடுகின்றன என்ற, காலம் வெளி பற்றிய கருத்துக்கள் பரவின.

     ஆக, அகபுற உலக மாறுதல்களால் பாதிக்கப்பட்ட இந்த நூற்றாண்டு ஆரம்ப
காலத்தவன் புதுக்கவியாக மலர்ந்தது மேல் நாட்டில் கவிதை உலகம் கண்ட அனுபவம்.
அது பூத்த பூக்கள் நிறைய.

     இதற்குப் பின், தமிழில் பாரதி செய்த முயற்சிகள் பற்றி குறிப்பிட்டுவிட்டு. புதுக்குரல்
கவிஞர்கள் சிலரது சிலபடைப்புக்களை செல்லப்பா இம்முன்னுரையில் ஆராய்ந்திருக்கிறார்.

     1910-20களில் மேல் நாட்டு புதுக்கவிதைக்கு ஒரு உந்துதல் ஃபிராய்டீயம், மார்க்சீயம்
இரண்டிலிருந்தும் மனோதத்துவ லோகாயத தத்துவ ரீதியாகவும் ஏற்பட்டது’ என்ற தகவலும்
இம்முன்னுரையில் காணக்கிடக்கிறது.

     மார்க்சிய தத்துவத்தினால் பாதிக்கப்பட்டவர்களும்-மார்க்சிய நோக்குடன்
வாழ்க்கையையும் சமூகத்தையும் கவனித்துத் தங்கள் எண்ணங்களைச் சொல்கிறவர்களும்
அவர்களது கருத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களும் தமிழில் புதுக்கவிதை எழுத
முற்பட்டார்கள். அது பிந்திய நிகழ்ச்சி.

     இத்தகையோரது கவிதைகள் எழுத்து ஏடுகளில் இடம்பெற்ற