| டைனமோப் பெண்ணாள் தன் காந்தக் கண்களினால் குழந்தைகளை நோக்க, புத்துலகைக் காண்கின்றாள். அனல் கக்கும் ஒரு குழந்தை ஒலி பரப்பும் ஒரு குழந்தை ஒலி வீசும் ஒரு குழந்தை ஒலி ஒளியைப் படமாக்கும் இரட்டையர்கள். நிலம் நடுங்க தாள் பதியும் மர்மப்பிள்ளை? ஓயாமல் காலத்தை ஓட்டிக் காட்டும் முள்ளுக்கைப் பிள்ளை பிள்ளை பெற்ற பெருமையிலே இருந்த பெண்ணாள் பெயர் வைக்க வந்த விஞ்ஞான சாஸ்திரியைப் பார்த்தாளா? நானறியேன். |
| (எழுத்து 53) |
நல்முத்து பற்றிய ‘கண்’ என்ற கவிதையும் ரசமானதுதான். நல்முத்து ‘ஆழ்கடல் வயிறு-அவனிக்களித்த-அற்புதப் புதையலோ?’ கடலின் சிப்பிக் கண்ணுள் தூசோ எதுவோ நுழைந்ததனால் சேர்ந்த துன்பச் சேமிப்போ, என்றெல்லாம் சிந்திக்கிற கவியின் வியப்பு இப்படி வளர்கிறது- |
| இல்லை இல்லை துன்பம் எங்கேனும் விண்ணில் போய் மின்னி மாந்தர் கை சேர்ந்து அரம்பையர் விரும்பும் அணிகலனாமா? விலை மலையாய்ப் போமா? கண் தான் காட்சியா? இல்லா விட்டால்? நல்முத்தும் வர்ணம் பூசின வெறும் எலும்பு சுண்ணாம்பு பாஸ்பேட் ஸோடா கார்பனேட் தானா? |
| (எழுத்து 54) |