விஞ்ஞான உண்மையை நயமான கவிதையாக்கிக் காட்டுகிறது. நா. வெங்கட்ராமனின் ‘அந்தி’ எனும் படைப்பு. |
| துயிலும் முன் பரிதி தூக்கி யெறிந்த வெள்ளை வெற்றிலைக் காம்புகளை ஆகாசத் தூசுக்கும்பல் பொறுக்கி மென்று உமிழ்ந்த எச்சில் |
| (எழுத்து 65) |
கவிதையில் காலாகாலமாகக் கையாளப்பட்டு நைந்து போன விஷயத்துக்குக் கூடப் புதுமை சேர்க்க இயலுமா என்று புதுக்கவிதை சோதனை செய்யத் தயங்கவில்லை; நிலவு இம்முயற்சிக்கும் கை கொடுக்கிறது. ‘கிணற்றில் விழுந்த நிலவு’ என.எஸ்.வைதீஸ்வரன் எழுதியதையும் நிலவை கற்புக்கரசியாகக் கண்டும், நாணமிலாப் பரத்தையாகக் கொண்டும் தி.சோ. வேணுகோபாலன் ஒட்டும் வெட்டுமாக இரு கவிதைகள் படைத்ததையும் முன்னரே குறிப்பிட்டுள்ளேன். வேறு கோணங்களிலும் நிலவைப் பார்க்கிறார்கள் சிலர். |
| விட்டெறிந்த இட்டலியோ கட்டிவைத்த பழஞ்சோறோ கொட்டி விட்ட கப் தயிரோ சுட்டு வைத்த அப்பந் தானோ? என்ன இழவேயானாலும் எட்ட இருந்து சிமிட்டுது கண் கிட்ட வந்து எட்ட வில்லை பாடுபட்ட பாட்டாளி கொட்டாவி விடுகின்றேன் ஆவ்....... உறக்கம் வருது பசிமறக்கும். |
இ. அண்ணாமலை என்பவரின் நோக்கு இது. (எழுத்து 66-67) சி. மணி காணும் தோற்றம் வேறு ரகமானது. |
| நல்ல பெண்ணடி நீ! முகத்திரை இழுத்து விட இரண்டு வாரம் அதை எடுத்து விட இரண்டு வாரம் இதை விட்டால் வேறு வேலையே இல்லையா உனக்கு? |
என்று நிலவைப் பார்த்துக் கேட்கிறார் அவர். (எழுத்து 68) |