| கோடேவெயிலு காலுங்கீளே கொளுத்திச் சுட்டுப் பொசுக்க பாட்டை வெளியே போன ராக்கி அங்கே வந்து ஒதுங்ணா! வேத்துக் கொட்டி வெள்ளேச்சேலே மேலே ஓட்டிப்போயி அள்ளிச் சொருவியிருந்த மயிரு அவுந்து மேலே கொட்டி நேத்து தாண்டா அவளே கிட்டே பாத்து சொக்கிப் போனேன்! கள்ளிப் பசப்பிப் பேரைக் கேட்டா குனிஞ்சு நின்னு சிரிச்சா! அடபோடா - நீ யென்ன கண்டே அந்த அளவே? பொளுதே மறந்தேன் போக்கை மறந்தேன் பெறப்பெக் கூட மறந்தேன் மொடவன் பேலே மரத்துங்கீளே பாவிமய மாயம் உளந்து கெடந்தேன், பொச்சாய ஆத்தா வந்து பாத்தா! ராக்கி நெனப்பு ராக்கி சிரிப்பு- அது என்ன போடா- ராப்பவலா எந்நேரம் வேறே நெனப்பு இல்லே! பாக்கி நாளு என்னா செய்வேன் சொல்லு பாப்பம் சொக்கா! சப்புன்னு இருக்கு சீவன் செத்துப் போனாத் தேவலாம், | | | இதேபோல ‘கள்ளுப் போனா போகட்டும் போடா எனக்கு சொக்கி இருக்கா சொக்கா!’ என்று முடியும் ரசமான கவிதை ஒன்றும் உண்டு. | | |
|
|