பிச்சமூர்த்தி கவிதைகள் (1969 க்கு பிற்பட்டவை) | ந. பிச்சமூர்த்தியின் கவிதைகளில், 1934-1946 காலத்திய படைப்புகளை இத் தொடரில் ஆராய்ந்த போது, 1960களில் இயற்றப்பட்ட அவரது கவிதைகளைத் தனியாகக் கவனிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். பிச்சமூர்த்தியின் இரண்டாவது காலகட்டக் கவிதைகள் பெரும்பாலும் ‘எழுத்து’ இதழ்களிலேயே பிரசுரம் பெற்றன. மிகக் குறைவானவையே ‘நவ இந்தியா’ ‘சிவாஜி’ மலர், ‘சுதேசமித்திரன்’ மலர் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. ‘இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்வுக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள். அறிவொளியும், உணர்வின் ஓட்டமும், அழகு நயங்களும் செறிந்த, ரசனைக்கு இனிய விருந்து ஆகும். இலக்கிய படைப்புகள் அவை!, ந.பி.யின் முதல் கட்டக் கவிதைகள் குறித்து இவ்வாறு கூறியுள்ளேன். அவருடைய பிற்காலக்கவிதைகளும் இதே எண்ணத்தை வலியுறுத்துகின்றன. இயற்கையின் தரிசனமே வாழ்க்கைக்கு அத்தியாவசியமான நல்ல வழிவகைகளை உணர்த்தக்கூடும் என்பதில் கவிஞருக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது. இயற்கையே நல்லாசான், சிறந்த வழிகாட்டி, அரியதுணை, உற்ற மருத்துவன் என்று தம் கவிதைகள் மூலம் திரும்பத் திரும்ப எடுத்துக் கூற முற்படுகிறார் கவிஞர். ‘வாழ்வுக்கு வக்கணை சொல்ல’ வந்தவர்கள். | | வர்த்தகராய். வணிகராய். பண்டமாற்றுப் பரம்பரையாய். உழைப்புக்குக் கூலியும், உடைக்கு விலையும் நெல்லுக்குப் பண்டமும், மூச்சுக் கெதிர் மூச்சும் கொடுப்பதை நெறியாக்கி இருப்பதை ஒளிக்கச் சொன்னார். ஒன்றைக் கொடுத்து ஒன்பதைக் கொள் என்றார். | ஆனால் தோட்டத்தில் நட்ட செடி என்ன கற்பிக்கிறது? | | சளைக்காமல் தினந்தோறும் வெடிக்கும் மலர் முரலும் ‘என்னை எடுத்துக் கொள் | | |
|
|