| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 186 |
இதைக் கூறும் ‘சொல்’ எனும் கவிதை இக்கூற்றை விளக்கும் உதாரணங்களையும் தருகிறது. கடவுளின் படைப்புகளுக்குப் போட்டியாகவும், இயல்பான அமைப்புகளில் உள்ள குறைபாடுகளை அல்லது மடமையை, கலையின் குறையை நீக்கவும் மனிதர்கள் செய்கிற சாதனைகளையும், அறிவின் பெயரால் அவர்கள் கர்வம் பேசி மகிழ்வதையும் ‘விஞ்ஞானி’ சுட்டுகிறது. சுலபமாகப் பணம் பண்ணி உயர்ந்தவனின் வாழ்க்கை நோக்கையும் மனப்போக்கையும் சுவையாகச் சித்திரிக்கிறது ‘பெட்டிக் கடை நாரணன்’. | | தானாகத் தங்கம் தடத்தில் கிடைத்தால் ஒடென் றொதுக்க நான் பட்டினத்தாரா? | என்றும், ‘பாவமொன்றில்லாவிட்டால், பாருண்டா? பசியுண்டா? என்றும் அவன் கேட்கிறான். உயிர்ப்பும் உணர்ச்சியும், பரிகாசத் தொனியும், வாழ்க்கை உண்மைகளும் கலந்துள்ள மணியான கவிதை இது. புராதனமான கதை எதையாவது ஆதாரமாகக் கொண்டு நெடுங்கவிதை புனையும் வழக்கத்தை இப்போதும் ந.பி. கையாண்டிருக்கிறார். அப்படிப் பிறந்ததுதான் ‘வழித்துணை’. படைப்புக் கடவுள் (ஆதிக்குயவன்) ஆக்குகிற பாத்திரங்கள் குறைபாடுகளை உடையனவாக இருக்கின்றன. ஆனால் உண்மையான கலைஞன். | | ‘மேதை பொருளுக்கு அடிமை ஆகாத பேதை, செய்வதைச் சுத்தமாய்ச் செய்வதில் மனத்தை கற்பூரமாக்கும் இயல்பு பைத்தியம்’ | ஆத்ம பூர்வமாக ஈடுபட்டுச் செய்கிற வேலை அற்புதப்படைப்பாக விளங்குகிறது. பிரமனின் படைப்புகளுக்கும் அழிவு உண்டு. பிரமன் கூட கால வெள்ளத்தில் இழுபட்டு மாறுதல் பெறுவான். கலைஞன் சிருஷ்டி அழிவுறுவதில்லை; கலைஞனும் மூவாப் பெருமையுடன் திகழ முடியும். இக்கருத்தை வலியுறுத்தும் உருவகக் கவிதையாக அமைந்துள்ளது ‘வழித்துணை’. இதில் வருகிற கலைஞனான தச்சன் வழித்துணையாக உதவக் கூடிய கைக்கோல் ஒன்றைச் செய்து முடிக்க எப்படி மரம் தேர்ந்தான், அவசரமின்றி எவ்வாறு உழைத்தான், அந்நேரத்தில் மற்றவர்களும் சூழ்நிலைகளும் எவ்வகை மாறுதல்களை பெற்றனர், கலைஞன் கவனித்த | | |
|
|