ஸ்தானம்- நிரந்தரமான ஸ்தானம்-உண்டா?” |
28-5-1939 ‘சூறாவளி’ இதழில் வந்த இதுதான் அச்சு ரூபத்தில், புதுக்கவிதைக்கு விரோதமாக எழுந்த முதலாவது எதிர்ப்புக் குரல் ஆகும். |
4-6-1939 இதழில் ‘மயன்’ சிறுபதில் ஒன்று கொடுத்திருந்தார். |
“Vers Libre” என்ற பதம் ‘சுதந்திரத்தை நோக்கி’ என்று அர்த்தப்படும்- மேல் நாடுகளில் சென்ற ஒரு நூற்றாண்டாகக் கலைகளின் தளைகளை அறுத்தெறியச் செய்யப்பட்டு வரும் முயற்சிகளுக்கு பொதுவாக இப்பெயர் வழங்கி வந்திருக்கிறது. |
கவிகளுக்கு சுதந்திரம் வேண்டியதுதான் என்று ஒப்புக்கொள்ளும் மகராஜ் ஓரளவுக்கு மேல் அந்த சுதந்திரம் இருக்கக்கூடாது என்று சொல்லுகிறார். கட்டுப்பாடில்லாதது என்று சொல்லப்படும் இந்தக் கவிதைக்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு; அதை அனுசரித்து எழுதினால்தான் அது கவிதையாகும் என்பதை மறந்து விட்டார் மகராஜ். |
என்னைப் பற்றிய வரையில் “எல்லா இலக்கியத்துக்கும் பொதுவான பாஷை, அர்த்தம் என்ற இரண்டு கட்டுப்பாடுகளே அதிகம் என்று சொல்லுவேன்”. |
அதே இதழில், வசனகவிதை முயற்சியைக் கேலி செய்யும் ‘வசனகவிதை’ என்னும் பரிகாசப் பாடல் ஒன்றும் வெளிவந்தது. அதை எழுதியவர் பெயர் வெறும் ‘எஸ்’ என்றே தரப்பட்டிருந்தது.* |
|
| வசன கவிதை | |
| எதுகையும் மோனையும் வேண்டவே வேண்டாம் சீரும் கீரும் சுத்தச் சனியன்கள் வெண்பாவும் கிண்பாவும் விருத்தமும் திருத்தமும் வேண்டாத தொல்லைகள் மட மட வென்றும், கட கட வென்றும், மள மள வென்றும் வசன கவிதை எழுதித் தள்ளுவோம் “ததாஸ்து” வாணியின் விலங்குகள்- கைவிலங்கும் கால்விலங்கும் படார், படார்! டணார், டணார்! | |
________________ * அப்படி ‘எஸ்’ என்ற பெயரில் எழுதியது தானேதான் என்று ‘சுந்தா’ பின்னர் என்னிடம் தெரிவித்துள்ளார். |