எல்லாம் எழுதியிருப்பது சரிதானா? புதுக்கவிதையின் இந்தப் போக்கு நல்லதுதானா?- இவ்வாறெல்லாம் விவாதித்து ஒரு முடிவுக்கு வருவது - படிக்கிறவர்களின் விருப்பு வெறுப்புகள் இலக்கியநோக்கு முதலியவற்றைப் பொறுத்த விஷயம். என்னைப் பொறுத்த மட்டில், இலக்கியத்தில் அனைத்துக்கும் இடம் உண்டு. எதையும் -எல்லாவற்றையும் எழுத்தில் சித்திரிக்க வேண்டியது தான் என்ற நோக்கு உடையவனே நானும் என்று தெரிவித்து விடுகிறேன். ‘கசடதபற’ மூலம் பாலகுமாரன் கவனிப்புக்கு உரிய ஒரு கவிஞராக வளர்ச்சி பெற்றுள்ளார். ஜப்பானியக் கவிதை பாணியில் இவர் 4வரி, 3 வரிக் கவிதைகள் பல எழுதியிருக்கிறார். |
| முட்டி முட்டிப் பால் குடிக்கின்றன நீலக் குழல் விளக்கில் விட்டில் பூச்சிகள்’ ‘மழைக்கு பயந்து அறைக்குள் ஆட்டம் போட்டன துவைத்த துணிகள்’ விடலைகள் துள்ளித் துவண்டு தென்றல் கலக்க விஸில் அடித்தன மூங்கில் மரங்கள் |
போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். இவருடைய ‘வெப்பம்’ ரசனைக்கு உரிய நல்ல கவிதை. |
| நீரோடு கோலம் காணா நிலைப்படியும் நெளிந்தாடு சேலையில்லாத் துணிக் கொடியும் மலரவிட்டு தரை உதிர்க்கும் பூச் செடியும் வாளியும் கிணற்றடியும் துவைக்கும் கல்லும் வரளுகின்றன என்னைப் போல் அவளில்லா வெறுமையில். |
பாலகுமாரன், வளர வளர, ஓட்டமும் தொனி விசேஷமும் கொண்ட கவிதைகள் படைப்பதில் தேர்ச்சி பெற்றுள்ளார். ‘முளைமரங்கள்’ ‘தென்னை’ ஆகிய இரண்டும் முக்கியமானவை. |
| ‘தென்னை உச்சியில் பச்சை மட்டை ராட்க்ஷஸ மூக்காய் விடைத்துக்கிடக்கும் |