‘இந்தக் குளத்தில், நாளை நீர் வந்துவிடும்’ என்றும் அதனால் நிகழக் கூடிய சிலவிளைவுகளை சிந்திக்கும் ‘பிரிவுகள்’ ‘அந்திக்கருக்கலில், அலைமோதிக் கரையும், பெண்பறவை’க்காக இரங்குகிற ‘விதி’ ஆகியவை பாராட்டுதலுக்கு உரியவை. ‘செருப்புகள்’ பற்றியும், மற்றும் பல சிறு சிறு ‘கவிதை’களும் இவர் எழுதியிருக்கிறார் அவைகளில் அநேகம் கவிதைகளாக இல்லை. நீலமணியும் ‘கசடதபற’வில் சின்னச் சின்னக் கவிதை’கள் (நான்கு வரிகள், மூன்று வரிகள், இரண்டு வரிகளில் கூட) நிறையவே எழுதியிருக்கிறார். ஆனால், அவை அனைத்துமே கவிதைகள் ஆகிவிடமாட்டா. சிரிப்பு மூட்டும் என்பதற்காகப் பேசப்படுகிற கேலிகளும்’ கிண்டல்களும், சாமர்த்தியக் குறிப்புகளும் சிலேடைகளும், குறும்புத்தனமான, விஷமத்தனமான, உரைகளும் கவிதை என்ற பெயரில் பிரசுரம் பெற ஆரம்பித்துவிட்டன.
|