பக்கம் எண் :

205  வல்லிக்கண்ணன்

     1970 களில், இந்த திருப்பணியை நீலமணி அதிகமாகவே செய்திருக்கிறார்.
பர்ட்ஸ் வ்யு
  இரண்டாம் உலகத்
தமிழ் மாநாட்டுக்கு
திறக்கப்பட்டன சென்னையில்
இருபத்தி யொரு
புதிய லெட்டீன்கள்.
தீண்டாமை
  ராமர் தடவி
அணில் கோடு பெற்றதேல்
சீதையைத்
தொட்டதே இல்லையா?
பர்ட்ஸ் வ்யு
 
அழைப்பு
நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள்
என்று விளம்பரங்கள்
வலியுறுத்துகின்றன; வாயேன்
காபரேக் காரியைக்
கட்டிக் கொண்டேன்,
மியூசிக் இன்றி
அவிழ்க்க மறுக்கிறாள்.
கர்பி ஹட்டே ஏ .......வ், ஒரு
சோடா கொண்டாய்யா
 
     இவையும் இவை போன்ற பிறவும் கவிதைகளே இல்லை, நீலமணியின் ‘இது என்
பேப்பர்’ நன்றாக அமைந்துள்ளது.

     ஐராவதம் எழுதியுள்ள கவிதைகள் புதுமை நோக்குடன், தனிச் சுவையோடு உள்ளன.
அவற்றில் ‘ஹரி ஓம் தத்ஸத்’ எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு விசித்திர மனசின்
விந்தை நினைப்புகள் ரசமாகச் சொல்லப்பட்டுள்ளன இதில்,

     ந. மகாகணபதியும் கவிதைகள் எழுதியுள்ளார். ‘கரைநண்டுகள்’ குறிப்பிடத்தகுந்தது.
 
  நீ
நான்
யாவரும்
நண்டுகள்.
நீர்
ஊறிய