பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 210

  ட்ராக்டர்
வெட்கம் சிறிதுமின்றி
ஊரறிய உலகறிய
மண் என்னும் மங்கையைக்
கற்பழிக்கும் கயவன்
 
இப்படிப் பல உதாரணங்கள் எடுத்துக் காட்டலாம்.

     சாதாரண நடப்புக்களையும், சந்தேகங்களையும், சில பிரச்சினைகளையும், உரைநடையாக நேரடியாக எழுதாது, வார்த்தைக்குக் கீழ் வார்த்தையாக அடுக்கி ஒரே
வாக்கியத்தைப் ‘புதுக்கவிதை’யாகக் காட்ட முயல்கிற வேலைகளும் நடைபெற்றுள்ளன.
 

யாக்கை

  ஒரு
சிறிய
அலையின்
ஒரு
சின்னக்
குமிழ்
ஒரு
பெரிய
தத்துவம்
சொல்லிச்
சிதறியது!
 

நல்லெண்ணம்

  திருக்குறள்
அழியக்கூடாது
என்பதற்காகவே
நாங்கள்
இன்னும்
திருந்தாமலிருக்கிறோம்.
‘விவாகம்
சொர்க்கத்தில்
நிச்சயப்படுகிறது’
எனில்
விவாகரத்தும்
விதவைக் கோலமும்
எங்கே
நிச்சயிக்கப்படுகின்றனவாம்?
 
என்பவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.