| ட்ராக்டர் வெட்கம் சிறிதுமின்றி ஊரறிய உலகறிய மண் என்னும் மங்கையைக் கற்பழிக்கும் கயவன் |
இப்படிப் பல உதாரணங்கள் எடுத்துக் காட்டலாம். சாதாரண நடப்புக்களையும், சந்தேகங்களையும், சில பிரச்சினைகளையும், உரைநடையாக நேரடியாக எழுதாது, வார்த்தைக்குக் கீழ் வார்த்தையாக அடுக்கி ஒரே வாக்கியத்தைப் ‘புதுக்கவிதை’யாகக் காட்ட முயல்கிற வேலைகளும் நடைபெற்றுள்ளன. |
யாக்கை |
| ஒரு சிறிய அலையின் ஒரு சின்னக் குமிழ் ஒரு பெரிய தத்துவம் சொல்லிச் சிதறியது! |
நல்லெண்ணம் |
| திருக்குறள் அழியக்கூடாது என்பதற்காகவே நாங்கள் இன்னும் திருந்தாமலிருக்கிறோம். ‘விவாகம் சொர்க்கத்தில் நிச்சயப்படுகிறது’ எனில் விவாகரத்தும் விதவைக் கோலமும் எங்கே நிச்சயிக்கப்படுகின்றனவாம்? |
என்பவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். |