| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 222 |
விமர்சனங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. கலை இலக்கிய கருத்தோட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன. வானம்பாடிகளின் வரலாற்றில் இதுமுதல் போக அறுவடையின் காலம். மரபிலிருந்து புதிய மரபிற்கு பலர் தவழ்ந்து வந்ததும், சிலர் தாவி வந்ததும் கலைக் கண்ணோட்டத்துடன். சமூகப் பிரக்ஞையுடன் மிகச் சிறந்த கவிதைகள் படைக்கப்பட்டதும், கவிதைத் துறைக்கே அதிகம் தொடர்பில்லாத பலர், இதன் பொது ஈர்ப்பால் கவர்ந்திழுக்கப்பட்டதும் கவிதை, புலவர்களின் செய்யுள் கட்டிலிருந்து விடுபட்டு மக்களின் அரவணைப்பில் மகிழத் துடித்ததும் முற்போக்கு எண்ணத்துடன் எண்ணற்ற விலையிலாக் கவிமடல் வெளிவந்ததும் - இயக்கங்கள் ஆங்காங்கு அணி திரளத்தொடங்கியதும் - தனிமனித வாதத்துக்கெதிரான சமூக யதார்த்தவாதம் தன் தத்துவ பலத்தோடு வியூகம் அமைத்ததும் இந்தக் காலத்தில் தான்” (வானம் பாடிகளின் வரலாறு பற்றிய கட்டுரை; ஞானி அக்னி) | | நான் விடுதலைப் பறவை! எனக்கு சோனார் பங்களா பத்மா நதிக்கரையில் வீரவியட் நாமின் மேகாங் சதுப்புகளில் மிஸிஸிபி பாலத்து உயர் முகட்டு உச்சிகளில் சொந்தங்கள் உண்டு நாங்களெல்லாம் குரலெடுத்து கண்மூடிக் கிடக்கும் மனிதருக்காய் கூவுகிறோம்! ஊழிகள் பற்பலவாய் எங்கள் குயில்களெல்லாம் வசந்த ருதுக்களில் கடையாமம் கழி வேளை இசைத்த பெட்டைப் பாட்டல்ல இது! இது புதிய ஞானம்! புதிய ராகம்! புரட்சிப் பாட்டு! எங்களின் பொன்னிற அலகுகள் உள்ளே செக்கச் சிவந்த அக்னி நாக்குகள் உள்ளன. ஓவ்வொன்று மோர் சூரியப் பிரளயம்! எங்கள் குரல்களிலோ வெல்லும் மானுடத்தின் பிரகடனம் முழங்கி வரும்! | “சேலம் தமிழ் நாடன் எழுதிய இந்தப் ‘பிரகடனம்’ வானம் பாடிகளின் பொது இதயக் குரல் என்றே கருதலாம். ‘வானம்பாடி கட்சி சார்பற்ற ஒரு கவிதை இயக்கம். சமுதாயப் பார்வையை முன்வைத்துக் கவிதை படைப்பவர்களின் இயக்கம் இது. முற்போக்குச் சிந்தனை உடைய அனைவரையும் ஏற்றுக் கொள்ளும் இயக்கம் இது’. இவ்வாறு வானம்பாடிக் கவிஞர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆகவே, வானம்பாடி இதழில் கோவை வட்டாரத்துக் கவிஞர்கள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மனிதாபிமான முற்போக்குக் கவிஞர்கள் பலரும் கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். பெயர் பெற்ற கவிஞர்களோடு ஆற்றலால், ஆர்வத்தால், உழைப்பால் முன்னுக்கு வந்து கொண்டிருந்தவர்களும், புதிதாக எழுத முன்வந்த உற்சாகிகளும் தங்கள் படைப்புகளை வானம்பாடியில் வெளியிட்டுள்ளனர். இதர | | |
|
|