பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 228

     ‘காட்டுச் சிந்தனைப் புதர்களை வெட்டி, வாழ்வின் நேர்பாதையை வகுப்பதற்கே வச்சிரம் எடுத்ததாகச் சொன்ன இந்திரன் அகலிகை மனசைக் கவர்ந்து, அவள் உடலுக்கும் மிகுந்த சுகானுபவம் தருகிறான்.

இந்திரனை வெற்றி கொள்ள கருதிய முனிவர், எங்கும் எப்பொருளாகவும் எவராகவும், எல்லா இயக்கமாயும்’ இருக்கும் இறைவனைக் கற்பித்து, இறைவன் ஆட்சியை எழுப்பி, இந்திரனுக்கெதிராக நிறுத்தி, ‘இந்திரன் உட்பட எவரும் அவனன்றி அசைவதற்குரிமையில்லை’ என்று முழங்கினார்.

அகலிகை மூலம் இதைக் கேட்டறிந்த இந்திரன் - ‘ஞானத்தாடியை அசிங்கமாய் வளர்த்த, முனிவனைக் கண்டவன் - அவளை விட்டு ஓடினான்.
 
  பலமற்ற மனத்தரையிலிருந்து
ஆத்திரப்புயல் கிளப்பிய
சொற் புழுதியை
 
     சாபம் என்று வீசினான் முனிவன். அவனை அவள் வெறுத்தாள். அவளிடம் இன்பம்
அனுபவித்தும், அவளது இதயத்தை உணரத் தவறி விட்ட ‘சுரண்டல் மன்னன்’
இந்திரனையும் கரித்துக் கொட்டினாள்.

     இது காலம் காலமாக நடந்து வருகிறது. உலகம் எனதே என உரத்து முழங்கும்
ஒருவன், நீயே இறைவன் என்னும் இன்னொருவன்; இருவரின் காலடியில் ஒரு அனாதை
மனிதன். நெறிபடும் அவன் கண்களில் அகலிகை முகம் தெரிகிறது!

     இருவர் தன்மைகளையும், அவர் செய்த கொடுமைகளையும் விவரித்துச் செல்கிறது
கவிதை. உள்ளத்தை உயர்த்த விரும்பியவர் உடலை மதிக்கவில்லை. உடலை மதிக்க
வந்தவன் உள்ளத்தை கௌரவிக்கவில்லை.

     மனிதன் இரண்டான அந்த முதற் காலத்திலேயே எல்லாமும் இரண்டாகி விட்டன.
ஆண்டான் தோன்றிய அதே காலத்தில் அடிமையும் தோன்றிவிட்டான்.

     தெய்வம் தோன்றிய காலத்திலேயே பேய்களும் பிறப்பெடுத்தன.

     நான் அடிமையாகவும் மறுத்தேன்; ஆண்டானாகவும் மறந்தேன்.

     அதனால் கல்லுக்குள் சிறைப்பட - தண்டிக்கப்பட்டேன்.

     காலத்திரை விழுந்தெழும் வேறொரு காலத்தில் - ஆண்டான் அடிமை இல்லாத
காலத்தில் - இன்பமும் ஞானமும் இணைந்த பொழுதுகளில் - உடலும் உள்ளமும் கூடும்
கோலத்தில் மனிதனாக மறுபிறப்பெடுப்பேன் என்கிறாள் அகலிகை. தனது
விமோசனத்தையும் நம்பிக்கையோடு காண்கிறாள் அவள்.

     அகலிகை கதையை கருவாக்கி விரித்துரைக்கும் மற்றுமொரு கவிதை முயற்சியான
இதை. இதன் கற்பனைக்காகவும் கருத்தோட்டத்திற்காகவும் பாராட்டலாம்.

     வானம்பாடிகளின் மானுடகீதங்கள் - வானம்பாடி இதழ்களிலும் இதர
பத்திரிக்கைகளிலும் வெளிவதந்தவை, தேர்ந்து தொகுக்கப்பட்டு