பக்கம் எண் :

229  வல்லிக்கண்ணன்

‘வெளிச்சங்கள்’ என்ற பெயரில் ‘வைகறை’ வெளியீடு ஆகப் புத்தக உருவம் பெற்றுள்ளன.
 
  வைகறைப் போதுக்கு
வார்த்தைத் தவமிருக்கும்
வானம்பாடிகளே - ஓ
வானம்பாடிகளே!
இந்த பூமி உருண்டையைப்
புரட்டி விடக் கூடிய
நெம்புகோல் கவிதையை
உங்களில் யார் பாடப்போகிறீர்கள்?
ஓ! என் தோழரே
ஒப்பற்ற
அந்த மனிதாபிமானக் கவிதையை
நம்மில் யார் பாடப்போகிறோம்?
 
இப்படி ஒரு கவிதையில் கேட்டிருக்கிறார் மேத்தா.

     மனிதாபிமானமும் சமுதாயப் பார்வையும், தன்னம்பிக்கை ஆற்றலும் எதிர்காலக்
கனவுகளும் கொண்டு கவிதை வானத்தில் உற்சாகமாகப் பறக்கத் தொடங்கிய
வானம்பாடிகள் சாதித்திருப்பது சிறிதேயாகும். அவர்கள் செய்ய வேண்டியிருப்பது இன்னும்
மிகுதி.