உள்ளன. ராஜபாளையத்திலிருந்து, கொ.ச. பலராமனின் கவிகளைக் கொண்ட ஒரு சிறு தொகுப்பு ‘ரசிகன்’ என்ற பெயரில் வெளிவந்தது. இதன் வடிவ அமைப்பு முந்தியவைகளிலிருந்து மாறுபட்டது. கவிதைகளும் ‘கசடதபற’ கவிஞர்களின் போக்கிலிருந்து மாறுபட்டவை. ‘எல்லாம் மனிதனுக்காக. மனித வர்க்கத்தின் நன்மைக்காக, என்ற அடிப்படையில் மனிதாபிமானத்தோடும், சமுதாய மூடபழக்கவழங்களைச் சாடியும், சமுதாய அழுகல்களை அடிப்படியே பார்த்தும் உணர்ந்தும், பொருளாதாரச் சிக்கலில் புரண்டு அனுபவித்தும் எழுதிய கவிதைகள்’ என்று பலராமன் தன் படைப்புகளை அறிமுகம் செய்துள்ளார். வானம்பாடி இயக்கத்தைச் சேர்ந்த கவிஞர்களின் படைப்புக்களைத் தொகுத்த பாலா, தமிழ்நாடன் இருவரும் ‘நீ’ என்ற தலைப்பில் பிரசுரம் செய்தார்கள். ராசிபுரத்திலிருந்து வெளி வந்த இத்தொகுப்பில் ‘மானுடம் பாடும் வானம் பாடிகள்’ பலருடைய முற்போக்கு கருத்துக்கள் கொண்ட கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வெளியீடு ‘புள்ளி’ வகுத்துத் தந்த வடிவம் கொண்டதல்ல. கொஞ்சம் பெரிய சைஸ். அப்புறம் பிரசுரமான சிறு தொகுப்புகள் அனைத்தும் ‘நீ’ வடிவத்தையே மேற்கொண்டன. பெங்களூரிலிருந்து ‘ராமி’(ராமசாமி) என்பவர் ‘சப்தங்கள்’ என்ற தலைப்பில், தன் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டார். ‘பத்திரிகைகளில் எழுதுவதில் நம்பிக்கை இல்லாதவர்’ என்று விளம்பரப்படுத்திக் கொண்ட ராமியின்,’எந்தப் பத்திரிக்கையிலும் வெளிவந்திராத கவிதைகள்’ என்று சில ஆக்கங்கள், புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தில் மட்டுமே அச்சிடப்பெற்றுள்ளன. ஒவ்வொரு பக்கத்தில் மட்டுமே அச்சிடப் பெற்றுள்ளன. இத்தொகுப்பில் (48 பக்கத் தொகுப்பில் 24 பக்கங்களில் மட்டுமே அச்சு உண்டு) தேர்தல், ஊழல், இந்தியா, விதவை, விலைமகள், மக்கள், தொழிலாளர், அரசியல் கட்சிகள் போன்ற பல்வேறு விஷயங்கள் பற்றியும் கவிதை பண்ண முயன்றிருக்கிறார் ராமி. சில படைப்புகள் நன்றாக அமைந்துள்ளன. சென்னை ‘புதுமலர்கள் இலக்கிய வட்டம்’ (கவிஞர் நா. காமராசன்; இராம. சுப்பையா) ‘அலைகள்’ என்ற ‘மினி’ கவிதைத் தொகுப்பை தயாரித்து வெளியிட்டது. எம்.எஸ். தியாகராசன் தொகுத்தளித்த இதில், பத்துக் கவிஞர்களின் இருபத்தேழு கவிதைகள் உள்ளன. இவர்களில்பலர் இன்றைய சமுதாயத்தின் இழிநிலைகள். ஏற்றத் தாழ்வுகள் வாழ்க்கையின் அவலங்கள் குறித்தே கவிதைகள் இயற்றியிருக்கிறார்கள். ஊத்துக்குளி ‘மேகங்கள் வெளியீடு’ ஆக ‘பரணி கவிதைகள்’ என்ற தொகுப்பு வந்தது. ‘மாறுதலுக்காக அல்ல; மாற்றத்திற்காகவே சிந்திக்கிறோம்’ என்ற இதயஒலியோடு முத்துப் பொருநன், நீலவண்ணன், கலையரசு ஆகியோர் தங்கள் புரட்சிகர எண்ணங்களை புதுக் கவிதைகளாக ஆக்கியிருக்கிறார்கள். இவர்களை ‘நெருப்புப் பிஞ்சுகள்’ என்று அறிமுகப்படுத்தியுள்ளார் சேலம் தமிழ்நாடன். இத்தொகுப்பில் உள்ளவற்றில் கவித்தன்மையை விட எண்ண வேகமே மிகுதியாகக் காணப்படுகிறது. | | |
|
|