| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 42 |
| விடியற்காலை விடுதலையில் வளர்கிறது- செயல் செய்யும் தேவையில், கண் கண்டதற்கு மேல் ஓடுகிறது கனவு, பாதையெல்லாம் பூரிக்கிறது பேரவா- யௌவனம் மாறுகிறவரை பிறகு வருகிறது யோசனை, கரும வெற்றிகளில் பிறந்த களிப்பு, உற்பத்தி செய்வதிலிருக்கும் உள்ள நெகிழ்ச்சி, அரை குறையற்றதின் அழகு, நிறைவின் நிம்மதி, மண்ணின் மற்றெல்லா மகிழ்ச்சிகள்- மாலை வரை! இருண்டதும், மனிதன் மறுபடியும் பிரயாணமாகிறான் தன் வழியே- அமைதியாக. | வாழ்வின் இனிமைகளை ரசித்து மகிழ வேண்டும் என்று கருதி இன்பங்களை வியந்து போற்றுவதில் கு.ப.ரா. ஆர்வம் கொண்டிருந்தார் என்பதை அவர் எழுத்துக்கள் கூறும். அவரது வாழ்க்கைத் தத்துவத்தைப் பிரகடனப்படுத்துவது போல் அமைந்துள்ளது ‘நண்பனுக்கு’ என்ற கவிதை. | | ஓயாமல் எண்ணியும் பேசியும், சளைத்துப்போய் விட்டோம், அல்லவா? வார்த்தையை வைத்து வாதாடி வீண் வித்தியாசம் கொண்டோம். போதும்! மாயையும் தத்துவமும் என்ன என்று தெரியவே வேண்டாம்; கண்கண்ட சுகத்தைக் கடைந்து உண்போம், இனிமேல், வா! இவ் வாழ்க்கை நதி வரண்டு மணலாகும் மரணம் வரை அதன் கரைபுரளும் வெற்றியை ஒப்புக்கொள்வோம், அதனாலென்ன? உயிரின் இன்ப ஊழியத்தில் அடிமைகளாவோம். பாதகமில்லை! ஆத்மா, பரமாத்மா-இந்தப் பேச்சு- யுகம் யுகமாக, காது துளைத்துப் போச்சு! அது வேண்டாம் நமக்கு! மதுக்கிண்ணத்தைப் பற்றிப் பேசினானே அவன் யார்?-உமர்கயாம் - அவனைத் தொடர்வோம். அப்பா! | | |
|
|