பக்கம் எண் :

43  வல்லிக்கண்ணன்

     கு.ப.ரா. இறந்த பின், அவரது கவிதைகள் அனைத்தும் ‘கிராம ஊழியன்’ இதழ்களில்
தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டன. (1944 ஏப்ரல் கடைசியில் கு.ப. ராஜகோபாலன் மரணம்
அடைந்தார். ஏப்ரல் முதல் வாரத்தில் நான் ‘கிராம ஊழிய’னில் பணிபுரியச்
சேர்ந்திருந்தேன்.)

     எந்தப் பிரச்சனையையும் புதிய பார்வையில் நோக்கும் ஆற்றலை கு.ப.ரா. வின்
அறிவு பெற்றிருந்தது. இதை அவருடைய ‘எதற்காக?’ என்ற கவிதை விளக்கும்.
 
 

1

பாம்பே, படமெடுத்து நீ ஏன் இப்படி
மகுடி முன் மெய் மறந்து ஆடுகிறாய்?
பாம்பாட்டிக்கு பிழைப்பளிக்கவா?
இல்லை, இல்லை!
ஆடியாடியுன் ஆவலைத் தீர்த்துக்கொள்ள!


2

ராதே, குழலோசை கேட்டேன் நீ
காதல் கொண்டு கானகமெல்லாம் ஓடுகிறாய்!
கண்ணனுக்குன் கண்ணோக்கின்ப மளிக்கவா?
இல்லை. இல்லை!
ஓடியோடியுன் உள்ளப் பூரிப்பைக் கொட்ட!


3

பெண்ணே, புருஷனுக்கேன் இப்படிப் பணிந்து
அடிமைபோல இட்டதெல்லாம் செய்கிறாய்?
‘பண்ணு’ என்று சொல்லும் புருஷனுக்கஞ்சியோ?
இல்லை, இல்லை!
இட்டதைச் செய்து செய்து உணர்ச்சியை அடக்க
 

     இது ‘கலாமோகினி’ யில் வந்தது. அதே பத்திரிகையில் பிரசுரமான கவிதைகளில்
‘யோகம் கலைதல்’ என்பது தனிச்சுவையும் நயமும் கருத்தாழமும் கொண்டது. கவிதை
அன்பர்களின் ரசனைக்காக அதையும் இங்கே தருகிறேன்.
 
 

1

கரிச்சான் ஒன்று கூரை மேலிருந்து
மருட்சியுடன் மெல்ல மெல்லத் தயங்கி
வாய் திறந்து வேதம் பாடக் கேட்டு நான்
அவ்வின்பம் அலையெடுத்த இடத்தைப் பார்க்க
பரிந்து வந்தேன்; பாட்டை நிறுத்திப் பறவை
என்னைக் கண்டு எழுந்தோடி விட்டது!


2

கோதை யொருத்தி குளத்துநீரில் தனிமையில்
அழகு பார்த்து ஆனந்தம் கொண்டு நின்றாள்;
பாதையில் ஒளிந்து பார்த்துப் பரவசமெய்திய நான்