| நிலைதடுமாறி நெட்டுயிர்ப்பு விட்டுவிட்டேன்; மாததைக் கேட்டு மிரண்டுபோய் மேலாக்கிழுத்து குடமெடுத்துக் கொண்டு கடுகியே போய்விட்டாள்! 3 கவியொருவன் கனவில் ஆழ்ந்து கற்பனை கண்டு கருத்தை வெளியிட செவிமூடிச் செய்யுள் செய்ய விருந்தான்; தெரியாமல் அங்கே திட்டென்று போய்நான் கவி அழித்தேன்; சொல் இழந்து அவன் கடுந்துயருடன் கீழே சாய்ந்தான்! |