பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 46

  வெளியே-
அண்டங்கள் அதிர
பேரிகை முழங்குது!
 
என்று ஆரம்பித்து, வளரும் ‘புத்த பக்தி’ யின் கடைசிப் பகுதி இது:
 

 
காயம் பட்டவர்
செத்து வீழ்ந்தவர்
கணக்கைக் காட்டிட
அடிக்கடி விம்மி
ஒலிக்கும் வீர எக்காளம்;
பெண்கள் பிள்ளைகள்
அங்கங்கள் இழக்கும்
வார்த்தையைக் கண்டே
பேய்கள் பிசாசுகள்
கைகொட்டி நகைக்கும்;
மனித மனத்திலே
பொய்மைப் புகை பரப்பவும்,
தெய்விகக் காற்றிலே
நச்சு மணம் கலக்கவும்
பக்தி செய்கின்றார்
புத்தன் முன்னிலே,
கருணை வள்ளலின்
ஆசிகள் வேண்டி!
வெளியே-
அண்டங்கள் அதிர
பேரிகை முழங்குது.
 
‘பாசிச பூதம்’ பற்றிய வர்ணனை பின் வருமாறு:
 

 
காலம் எனும் இருள் வெளியின் ஊடே
வாலில்லாக் கருங்குரங்கு போலே
ஊர்ந்து வந்தது இப்பூதம்
இருள் மனமும் பெருவாயும் திறந்து
வியந்து நின்றது அறியாமை
முன்னைப் பொறாமை
திடுக்கிடும் பயத்துடன்
பண ஆசை உந்திட
துரோகத்தைத் தழுவிய வேளையில்
ஓர் வாணிபமாய்
பிறந்தது இதுவே.
வறண்ட வருடத்தில் பிறந்த பின்னர்
பொன்னுக்குத் தலைவணங்கி
பாபப் பால் பருகி,
கொடூரச் சேற்றிலும்
பயங்கர கதியிலும்