| அமைவான குலுக்கு நடை அத்தான் வந்திடுவான் அந்திவரை உழுது விட்டு; சித்தெ முந்திப் போகவேணும் செம்மறியைக் கட்டவேணும் என்றெண்ணம் ஓடி வந்து இங்கு முகம் திருப்பி நிற்க... சலங்கை ஒலி சிந்தி விட்டு சாடி வரும் இளமறியும்; அப்போது பார்த்து விட்டேன் அவளழகு முழுவதையும் என் நெஞ்சைக் கிளறிவிட்ட எழுதவொண்ணாக் காவியத்தை! | 1947 மே மாதம் ‘கிராம ஊழியன்’ நின்று விட்டது. இறுதிவரை அந்த மாதம் இருமுறைப் பத்திரிகை வசன கவிதை வளர்ச்சிக்காக முழு மூச்சுடன் உழைத்து வந்தது. | | |
|
|