| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 60 |
மற்றும் சில | | ‘கிராம ஊழியன்’ நின்ற பின்னர், நான் அவ்வப்போது, ‘சினிமா உலகம்’ இதழ்களில் கவிதை எழுதிக் கொண்டிருந்தேன்... ஊழியன் மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமான திருவனந்தபுரம் எஸ்.சிதம்பரம் (வைரம்) 1946-ல் ‘கவிக்குயில்’ என்ற பெயரில் மலர் ஒன்றை தயாரித்தார். அதற்கு என்னுடைய ஒத்துழைப்பு அதிகம் இருந்தது. 1947-ல் இரண்டாவது மலர் வெளியிட்டார். இரண்டு மலர்களிலும், மரபுக் கவிதைகளும், புதுக்கவிதைகளும் மிகுதியாகவே இடம் பெற்றன. தி.க. சிவசங்கரனின் ‘சமுதாயப் பார்வைக் கவிதைகள், அம்மலர்களில் பிரசுரமாயின. அவரது பரிணாமத்தைக் காட்ட ‘அங்கே’ என்ற கவிதை உதவும்...’ | | 1 சாக்கடைச் சோற்றை யாம் உண்கிறோம்; அங்கு சர்க்கரைப் பொங்கலை ஜமாய்க்கிறார்! 2 கந்தையால் மானத்தைக் காக்கிறோம்; வாடைக் காற்றிலே நடுங்கித் துடிக்கிறோம். சிந்தையில்அருளிலாப் பாதகர்-அங்கே சீமைத்துணிக்கு அலைகிறார். 3 மெத்தைக்குப் பூந்துகில் வேண்டுமாம்! மேனியைப் பஞ்சனை உறுத்துமாம்! செத்தையில் குப்பையில் படுக்கிறோம்! தேள்களும், ஈக்களும், மூட்டையும் கொத்திப் பிடுங்கினும் | | |
|
|