| துங்குறோம்; கோடையில், வாடையில் சாகிறோம். 4 கூழுக்கு விதியின்றி அலைகையில்--அங்கே கோப்பையில் சாராயம் ஓடுது! அம்மையின் மார்பில் ரத்தத்தை-எங்கள் அருமைக் குழந்தை குடிக்கையில் ‘ஆர்லிச்சு’ மாவுக்கு அலைகிறார்; அதற்கு ஆயிரம் பேரு சிபாரி 5 கொண்டவன் சீக்கிலே சாய்ந்திட, கூடவே யிருந்து குமைகிறோம். அங்கே-- அண்டை வீட்டுக்காரன் குட்டியை அடித்துக் கொண்டுபோக யோசனை. 6 எங்கள் குறைகளை இயம்பினேன். அதற்கென்றே பரிகாரம் தேடுவீர்! ‘இல்லாத சாதி’ யென் றிகழ்ந்திடில்-இனி நில்லாது எங்கள் கைச் சுத்தியல்!
|