பக்கம் எண் :

63  வல்லிக்கண்ணன்

  கன்னம் என்னும் கண்ணாடி மலர் வனம்
அவ்வன மலர்கள் யாவினும் பெருமையாய்
வாசனை வீசும் நாசிப் பொன் மலர்.

            7

உள்ளவான் பூத்த உவகை மதியம்
பற்கத வூடு பகல் நிலாப் பொழியும்
அந் நிலாக் கள்ளை யருந்திய உதடுகள்
செவ்விதழ் மலர்ந்து சிரித்துச் சிவப்பதேன்?
அழகுக் கரசன் மன்மதன் அவளது
பேச்சுக் கிள்ளையைப் பிடிப்பதற்காகக்
கொவ்வைக் கனிகளைக் கண்ணி வைத்தானெனச்
சிவந்தன உதடுகள், சிரித்தன மலர்ந்தே.

            8

மகர யாழ் வினையும் தோண் மிசை மன்மதன்
நாளமாம் வலம்புரி நாடிய கழுத்தாம்
தண்டிலே முகமெனும் தாமரை பூக்கும்.

            9

மார்பகம், அழகுக் கடல் வெடித்த அமுதக் குமிழிகள்,
ஆசை விதை வளர்த்த நேசக் கனிகள்:
புத்தின்பப் புதுமைத் தேன் பூரித்த கலசங்கள்

            10

புலர்ந்தும் புலராப் பொழுதிற் சிறிதே
அலர்ந்தும் அலரா அரும்புச் சிறுமி
கலந்தும் கலவாக் கனவுக் காலையில்
மலர்ந்தும் மலரா வசந்த வாயிலில்
நின்றாள், நெஞ்சில் நிச்சயம் பிறந்தது.
கூடாக் கூந்தலைக் கூட்டி முடித்தாள்
கூசா மெல்லிடை கூசக் குழைந்தாள்
நாடாச் சொல்லாள் நயமொழி பகர்ந்தாள்.
மன்மதன் அவளொளி மலரும் கிண்ணியில்
யௌவனம் என்னும் அமுதை வார்த்தான்.

            11

வெள்ளை நிலவின் வியப்புக் கிண்ணியில்
வான வில்லின் வர்ணக் கலவையைச்
சூரியன் சுடர்க் கதிர் தூரியம் தொட்டு
வார்த்த பொற்சித்திரம் வசந்தக் காற்றில்
உயிர் பெற்றுலாவும், உலகம் மயங்கும்.

            12

நீ என்ன?
கனவா, நினைவா, கற்பனையா?