| இந்திய மகனே! இந்த இணையிலாக் கொடியைக் காத்தல் முந்தியுன் முன்னோர் தந்த அறமெலாம் முடிப்ப தாகும் எந்தஓர் நாட்டிற் கேனும் எதிரியாய் எடுத்த தன்று சந்ததம் உலகுக் கெல்லாம் சாந்தியைத் தரவே யாகும். | |
கொடி பறக்குது |
பல்லவி |
| கொடிபறக்குது கொடிபறக்குது கொடிபறக்குது பாரடா கோணலற்ற கோலில் எங்கள் கொடிபறக்குது பாரடா. | (கொடி) |
சரணங்கள்
|
| சிறைகடந்து துயரடைந்த தேச பக்தர் நட்டது தீரவீர சூரரான தெய்வபக்தர் தொட்டது முறைகடந்து துன்பம் வந்து மூண்டுவிட்ட போதிலும் முன்னிருந்து பின்னிடாமல் காக்க வேண்டும் நாமிதை | (கொடி) |