பக்கம் எண் :

110நாமக்கல் கவிஞர்

  
  விடிகிற வரையிலும் அடிதடி ரகளை
வீதியில் மாதர்கள் ரோதனமும்
குடிவெறி யால்வரும் கொடுமைகள் யாவையும்
கூண்டோ டொழிந்தது இனிமேலே
(விட்டது)
 
எல்லா விதத்திலும் கள்ளால் வரும் பணம்
ஏளனத்துக்கே இடமாகும்
நல்லார் சரியெனக் கொள்ளா வரியிதில்
நம்மர சடைந்திட்டபழி நீங்கும்
(விட்டது) 
 
போதையைத் தந்தபின் நீதியை ஓதுதல்
புத்தியுடைய ஓர் அரசாமோ
பேதைக ளாக்கிப்பின் பிழை புரிந்தாயெனல்
பேச்சுக்காகிலும் ஏச்சன்றோ
(விட்டது)
 
காந்தியின் அருந்தவம் சாந்தமும் பலித்தது
காங்கிரஸ் ஆட்சியும் ஓங்கிடுமே
போந்தது புது யுகம் தீர்ந்தது கலிபலம்
பூமிக்கே ஒரு புதுமையிது
(விட்டது)
 
சக்கரவர்த்தி நாம் ராஜாஜீக்கொரு
சன்மா னம் நாம் தந்திடுவோம்
அக்கரையோடவர் ஆணைப்படி கள்ளில்
ஆசை புகாவிதம் காத்திடுவோம்
(விட்டது)
 
பாழும் கள்ளால் பட்டதை நினைத்தால்
பதைக்குது நெஞ்சம் கொதிக்குதடா
வாழும் நாடினி ஏழைகளிங்கில்லை
வானவர் வணங்கிட வாழ்ந்திடுவோம் .
(விட்டது)