| விடிகிற வரையிலும் அடிதடி ரகளை வீதியில் மாதர்கள் ரோதனமும் குடிவெறி யால்வரும் கொடுமைகள் யாவையும் கூண்டோ டொழிந்தது இனிமேலே | (விட்டது) |
| எல்லா விதத்திலும் கள்ளால் வரும் பணம் ஏளனத்துக்கே இடமாகும் நல்லார் சரியெனக் கொள்ளா வரியிதில் நம்மர சடைந்திட்டபழி நீங்கும் | (விட்டது) |
| போதையைத் தந்தபின் நீதியை ஓதுதல் புத்தியுடைய ஓர் அரசாமோ பேதைக ளாக்கிப்பின் பிழை புரிந்தாயெனல் பேச்சுக்காகிலும் ஏச்சன்றோ | (விட்டது) |
| காந்தியின் அருந்தவம் சாந்தமும் பலித்தது காங்கிரஸ் ஆட்சியும் ஓங்கிடுமே போந்தது புது யுகம் தீர்ந்தது கலிபலம் பூமிக்கே ஒரு புதுமையிது | (விட்டது) |
| சக்கரவர்த்தி நாம் ராஜாஜீக்கொரு சன்மா னம் நாம் தந்திடுவோம் அக்கரையோடவர் ஆணைப்படி கள்ளில் ஆசை புகாவிதம் காத்திடுவோம் | (விட்டது) |
| பாழும் கள்ளால் பட்டதை நினைத்தால் பதைக்குது நெஞ்சம் கொதிக்குதடா வாழும் நாடினி ஏழைகளிங்கில்லை வானவர் வணங்கிட வாழ்ந்திடுவோம் . | (விட்டது) |