பக்கம் எண் :

தமிழன் இதயம்111

  
கேள்விகள்
 

பல்லவி

  க(த்)தர் துணியுடுத்தச் சித்தமில்லா தநீ
கத்தியெடுத்தென் செய்குவாய்?
 


அனுபல்லவி

  பித்தரைப்போலவே மெத்தப் பிதற்றுகின்றாய்
சற்று நினைத்து உய்குவாய்
(கத்)


சரணங்கள்

  கள்ளுக்கடையில் உள்ளம்மயங்கின நீ
கஷ்டங்கள் சகிப்பாயோ!
வெல்லும் சமர்க்களத்தில் கொல்லெனமுன்னின்று
வீரமும் வகிப்பாயோ!
(கத்)
 
சாதிமதக்கலகப் பேதம்விடாதநீ
தைரியமடைவாயோ!
ஓதும்சமர்முனையில் ஏதும்கவலையின்றி
உயிரதை விடுவாயோ!
(கத்)
 
சத்தியம் பேசவும் மெத்தப்பயந்திடும்நீ
சண்டையிற் செய்வதென்ன?
சத்தமும் வீரனைப்போல் யுத்தமே பேசுகிறாய்
சூதனுமுய்வதுண்டோ!
(கத்)
 
உஷ்ணஜலம்படவும் கஷ்டம்பெறாதவர்
உடன்கட்டை ஏறுவாரோ!
இஷ்டமுனக்கிருந்தால் நஷ்டமில்லா வழி
இதைவிடக் கூறுகிறேன்.
(கத்)