பக்கம் எண் :

தமிழன் இதயம்113

  
  தூங்கித் தூங்கி விழும் தமிழா!-உன்
தூக்கம் போக்க வந்தோம் தமிழா!
ஏங்கிப் படுத்திருக்கும் தமிழா!-உன்னை
எழுப்ப வந்தசக்தி தமிழா!
(தேச)
 
எழுந்துநின்று கண்ணைத்துடைத்து-உன்
இருகையாலும் கொடிபிடித்து
அழுந்திக் கீழிருந்து வாடும்-அன்னை
அடிமை நீக்க வழிதேடும்.
(தேச)
 
வெட்டி வெட்டி எறிந்தாலும்-மற்றும்
வேறுஹிம்சை புரிந்தாலும்
சுட்டி ரத்தம் சொரிந்தாலும்-நாங்கள்
தூய்மை மாறிடோமே நாளும்
(தேச)
 
சாந்த மூர்த்தியந்தக் காந்தி-சொன்ன
சத்தியத் தையே ஏந்தி
மாந்தர் யாருமினி உய்ய-உயர்
மார்க்க போதனைகள் செய்ய
(தேச)
 
தேவிசக்திதுணை கொண்டு-இந்தத்
தேசம் சுற்றிவர வென்று
கூவிக்கூவி எங்கள் தொண்டு-புரியக்
குறைகள் தீருமினி நன்று
(தேச)