ஆடு ராட்டே |
பல்லவி |
| ஆடு ராட்டே சுழன் றாடுராட்டே | |
அனுபல்லவி |
| சுழன்று சுழந்று சுழன் றாடுராட்டே-இனிச் சுயராஜ்யம் வந்ததென்று ஆடுராட்டே | (ஆடு) |
சரணங்கள்
|
| பாபம் குறையுமென்று ஆடுராட்டே-இனிப் பயங்கள் மறையுமென்று ஆடுராட்டே கோபங் குறையுமென்று ஆடுராட்டே-நல்ல குணங்கள் மிகுந்ததென்று | (ஆடு) |
| மேலான ஜாதியென்று மிக்கப்பேசி-மிக மாறான காரியங்கள் செய்து வாழும் மாலான ஜனங்களின் வஞ்சனையெல்லாம்-இனி மாண்டு மடியுமென்று ஆடு ராட்டே | (ஆடு) |
| ஏழைகள் கண்ணீர்சொரிய மிக்கவருத்திப்-பல எத்துக்கள் செய்தே பிழைக்கும் மனிதரெல்லாம் வாழமுடி யாதினிமேல் வஞ்சனையினால்-அவர் வாழ்க்கை திருந்து மென்று | (ஆடு) |
| பட்டனத்து வீதிகளில் சுற்றியலைந்து-மிகப் பாடுபடும் கிராமத்துப் பத்தினிப் பெண்கள் இஷ்டமுள்ள தங்குடிசை நிழலிருந்து-நூல் இழைத்துப் பிழைப்பரென்று | (ஆடு) |