| கள்ளுபீர் சாராயம் காமவகைகள்-கெட்ட கஞ்சா அபின்களெல்லாம் ஓடியொளிக்க பிள்ளைகுட்டிப் பெண்ஜாதி வயிறார-உண்ணப் பெற்றதே சுதந்தரமென்று | (ஆடு) |
| உழுது நெய்துபல தொழில்செய்து-பொருள் உதவும் வாணிபமும் முயல்வதல்லால் தொழுது பணிபுரியும் தொழில்களெல்லாம் தோல்வியடையுமென்று | (ஆடு) |
| வம்பளந்து வீண்பொழுது போக்கமாட்டார்-பெண்கள் வாசலிலே கூட்டமிட்டுப் பேசமாட்டார் துன்பமில்லை சோம்பியவர் தூங்கமாட்டார்-குடி சுத்தப்படு மென்று சொல்லி | (ஆடு) |
| ஜாதிஜனக் கட்டுகளை மதிக்காமல்-நித்தம் தானடித்த மூப்பாக வாழ்ந்ததெல்லாம் நீதிநெறி தெய்வவழி நினைத்தினிமேல்-சுகம் நிரம்பத் திரும்பு மென்று | (ஆடு) |
| ஆங்கிலம் படித்தோமென் றகங்கரித்துச்-சொந்தம் அக்கம்பக்கம் யாரெனினும் மதியாமல் தாங்களே பெரியரென் றிருந்ததெல்லாம்-இனித் தலைகுனிந்தோடுமென்று. | (ஆடு) |
| சர்க்கார் மனிதரென்று மதிமயங்கி-குணம் தக்காரெனினும் அவ மதித்தவர்கள் சர்க்கார் ஜனங்களென்று மதிதெளிந்து-இனித் தாழ உரைப்பதென்று | (ஆடு) |
| படித்தம் படித்தமென்று பட்டங்காட்டி-ஏழைப் பாமரரை ஏய்த்து வாழ்ந் தவர்களெல்லாம் நடித்த நாடகங்கள் தவறென்பதைக்-கண்டு நல்வழி நடப்பரென்று | (ஆடு) |