பக்கம் எண் :

தமிழன் இதயம்115

  
  கள்ளுபீர் சாராயம் காமவகைகள்-கெட்ட
கஞ்சா அபின்களெல்லாம் ஓடியொளிக்க
பிள்ளைகுட்டிப் பெண்ஜாதி வயிறார-உண்ணப்
பெற்றதே சுதந்தரமென்று
(ஆடு)
 
உழுது நெய்துபல தொழில்செய்து-பொருள்
உதவும் வாணிபமும் முயல்வதல்லால்
தொழுது பணிபுரியும் தொழில்களெல்லாம்
தோல்வியடையுமென்று
(ஆடு)
 
வம்பளந்து வீண்பொழுது போக்கமாட்டார்-பெண்கள்
வாசலிலே கூட்டமிட்டுப் பேசமாட்டார்
துன்பமில்லை சோம்பியவர் தூங்கமாட்டார்-குடி
சுத்தப்படு மென்று சொல்லி
(ஆடு)
 
ஜாதிஜனக் கட்டுகளை மதிக்காமல்-நித்தம்
தானடித்த மூப்பாக வாழ்ந்ததெல்லாம்
நீதிநெறி தெய்வவழி நினைத்தினிமேல்-சுகம்
நிரம்பத் திரும்பு மென்று
(ஆடு)
 

ஆங்கிலம் படித்தோமென் றகங்கரித்துச்-சொந்தம்
அக்கம்பக்கம் யாரெனினும் மதியாமல்
தாங்களே பெரியரென் றிருந்ததெல்லாம்-இனித்
தலைகுனிந்தோடுமென்று.
(ஆடு)
 
சர்க்கார் மனிதரென்று மதிமயங்கி-குணம்
தக்காரெனினும் அவ மதித்தவர்கள்
சர்க்கார் ஜனங்களென்று மதிதெளிந்து-இனித்
தாழ உரைப்பதென்று
(ஆடு)
 
படித்தம் படித்தமென்று பட்டங்காட்டி-ஏழைப்
பாமரரை ஏய்த்து வாழ்ந் தவர்களெல்லாம்
நடித்த நாடகங்கள் தவறென்பதைக்-கண்டு
நல்வழி நடப்பரென்று
(ஆடு)