| அரைக்காசுக் கானாலும் ஒருநாள் முழுதுங்காப்பாய் ஆயிரம் பேரையேனும் அலுப்பின்றிப் போய்ப் பார்ப்பாய் உரைப்பார் உரைகட் கெல்லாம் உயர்ந்திடும் செல்வனை உன்னுள் இருப்பவனை எண்ணிட நேரமில்லை. | (ஒரு) |
| சிலநாளைக் கதிகாரம் செய்யும் ஒருவர்க்கஞ்சி செய்யச் சொல்வதை யெல்லாம் செய்வாய் நீ பல்லைக் கெஞ்சி பலநாளும் ஜென்மமெல்லாம் பாலிக்கும் அதிகாரி பரமனை நினைக்கவும் ஒருகணம் உனக்கில்லை. | (ஒரு) |
| ‘நாளும் கிழமை’ யென்று நல்லவர் உரைத்தாலும் ‘நாளைக்கு ஆகட்டும் வேலை அதிகம்’ என்பாய். பாழும் பணத்தைத் தேடி படும்பாடு கணக்கில்லை பகவானை எண்ணமட்டும் அவகாசம் உனக்கில்லை. | (ஒரு) |