சக்தி தோத்திரம் |
| பல்லவி |
| | சக்தி எனக்கே அருள்வாய் - பரா சக்திபெண் தாயுனைநித்தமும் தொழுதனன் | (சக்தி) |
| சரணம் |
| | பக்தியோ டுன்றனைப் பணிந்திடல் மறந்தேன் பாரினிற் சுகமெல்லாம் நீயெனத் தெரிந்தேன் இத்தின முதலுன்றன் இணையடி புரிந்தேன் இனிமேற் பிணியில்லை கவலைகள் துறந்தேன், | (சக்தி) |
| | நோய்களைத் தடுத்திட நுண்ணிய அறிவும் நொந்தவர் தங்களைக் காத்திடப் பரிவும் மாய்வதைக் குறைத்திட மருந்துகள் முறிவும் மந்திர தந்திர மணியவை தெரியும் | (சக்தி) |
| | கல்லினுங் கட்டுடைய தேகம் எனக்கருள்வாய் காலனை ஜெயித்திடும் கருணையும் தருவாய் சொல்லிலும் செயலிலும் தூய்மையைத் தருவாய் சோம்பலை யோட்டிநற் சுகமெனக் கருள்வாய் | (சக்தி) |
| | புண்ணிய பாபமென்றன் இச்சையிற் கடந்து பூதங்கள் ஐந்துமென் சொற்படி நடந்து எண்ணிய யாவுமென்றன் இஷ்டப்படி முடிய ஈன்றவளே உன்றன் அருள்வரத் தடையோ. | (சக்தி) |