முருகன் பாட்டு
| | முருகனென்ற சிறுவன்வந்து முணுமுணுத்த சொல்லினால் முன்னிருந்த எண்ணம்யாவும் பின்னமுற்றுப் போனதே அருகுவந்து மனமுவந்து அவனுரைத்த ஒன்றினால் அடிமையென் மனத்திருந்த அச்சமற்றுப் போனதே இளமையந்த முருகன் வந்து என்னோடொன்று சொல்லவே என்னுளத் திருந்த பந்தம் ஏதுமற்றுப் போனதே வளமையுற்று இளமைபெற்று வலிமிகுத்த தென்னவே வந்ததே சுதந்திரத்தில் வாஞ்சையென்ற ஞானமே. அழகனந்த முருகன் வந்தென் அருகிருந்த போதிலே ஐம்புலன்க ளுக்கொடுங்கி அஞ்சியஞ்சி அஞ்சிநான் பழமையென் உடற்கண்வைத்த பற்றுயாவும் அற்றதால் பாரிலென்னை யாருங்கண்டு பணியுமாறு செய்ததே. அன்பனந்த முருகன்வந் தழைத்திருத்தி என்னையே அஞ்சல் அஞ்சல் அஞ்சலென்று அகங்குழைந்து சொன்னதால் | | |
|
|